இலக்கியத்தை படியுங்கள்

கதை கவிதை கட்டுரை என்று இலக்கியங்களை தேடித் தேடி படியுங்கள் நண்பர்களே.

இந்த உலகில் மிகவும் மென்மையான காதலையும் வீரத்தையும் அன்பு இரக்கம் போன்ற கடவுள் படைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் இலக்கியத்தில் மட்டும் தான் இருக்கிறது.


தினமும் சீரியல் பார்த்து சீரியஸாக வாழும் மனிதர்களே, சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து உங்களின் உடனிருக்கும் சொந்த பந்தங்களுடன் நேசமுடன் வாழுங்கள் 

உங்களின் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகள் வாழ்வில் நடைமுறை சிக்கல் அனைத்திலும்  மனிதர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.


உடனிருக்கும் யாருக்கும் எந்த தீங்கு வராமல் பார்த்துக் கொள்ளவும்.. முடிந்த வரை தன்னாலான உதவிகளை செய்யவுமே எல்லோரும் நினைக்கின்றனர்.

ஏனென்றால் நீர் குமிழி வாழ்க்கை என்பதை உணர்ந்தவன் எல்லோரும் நன்மை செய்யவே முற்படுகிறான்.

.கடவுளை கண்டவனை விட கடவுளை காட்டுவதாக சொல்லி கல்லா கட்டி தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்துபவரே பலர்.

சில உண்மை நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கண்ணுக்கே தெரியாத கடவுளுக்கு அஞ்சி எந்த தவறுமே செய்யாமல்.. மிகவும் ஒழுக்கமாக வாழும் நபர்கள்‌அவர்கள்.

அவர்கள் இறைவனின் பெயரால் ஏழைகளுக்கு உதவுகின்றனர்..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...