.
.
உண்மையே
தேடும்
மனிதர்கள் கூட
பொய்களை பேசி
உண்மை மறைக்க
பிரயத்தனங்கள்
ஆயிரம் செய்யும் போது
பொய்களை தாண்டி
உண்மை காணும்
இறைவனை வேண்டி
அலைகிறேன்..
அவனோ அனைத்தும்
அறிந்தும் அறியாதவன்
போல் அமைதியாக....
அவனின் அமைதியை
சாதகமாக்கி சிலர்
செய்யும் வேடிக்கைகள்
வாடிக்கையான
உலகில் விநோதமல்லவே
No comments:
Post a Comment