விநோதமல்லவே

 


.
.
உண்மையே
தேடும்
மனிதர்கள் கூட
பொய்களை பேசி
உண்மை மறைக்க
பிரயத்தனங்கள்
ஆயிரம் செய்யும் போது
பொய்களை தாண்டி
உண்மை காணும்
இறைவனை வேண்டி
அலைகிறேன்..
அவனோ அனைத்தும்
அறிந்தும் அறியாதவன்
போல் அமைதியாக....
அவனின் அமைதியை
சாதகமாக்கி சிலர்
செய்யும் வேடிக்கைகள்
வாடிக்கையான
உலகில் விநோதமல்லவே

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...