801-வது கவிதை படைப்பு டீக்கடை வாசல்

 கடவுளே இல்லை 

என்பவரும் கடவுளே 

எல்லாமும் என்பவர்களும் 

ஓரே டீக்கடையில்  தான் 

மசால் வடையும் இஞ்சி 

டீயும் குடித்தனர்.. ஆனால் 

அவர்களுக்கு செலவு 

செய்தது என்னவோ 

உண்மையை மட்டுமே 

தேடும் இரு வேறு 

சிந்தனை கொண்ட 

நல்ல இரு மனிதர்கள்..

கடவுள் இருக்கிறார் என்றவனோ 

சில்லறை காசுகளையே கேட்டான்.. கடவுளின் பெயரால் உணவு படைத்து 

ஏழைக்கு கொடுக்க வேண்டுமென்று..

ஆனால் கடவுளே இல்லை என்றவனோ 

தனது எடைக்கு எடையாக ரூபாய் 

நோட்டுகளை கேட்கிறான்...

கடவுளை இல்லை என்னும் 

பலரும் கடவுளை நம்ப தொடங்கினர்...

எங்கோ இருக்கும் கடவுள் சேவகன் 

சில்லறை காசே போதுமென்கிறானே..

இவனை விட நல்லவனை உலகில் 

காண்பதரிது என்றே புத்தனாக 

பலருக்கு ஞானம் பிறக்கும் இடமே 

டீக்கடை வாசல்..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...