ஏழையாக இருந்து கஷ்டப்பட்டு
முன்னேறிய பணக்காரன்
அவனிடம் இருக்கும் பணத்தை
எப்படியாவது அடைய நினைக்கும் பலர்..
ஆனால் அதை அந்த பணக்காரனிடம்
வெளிப்படையாக சொல்லி விடவில்லை..
எனவே தன்னை சுற்றி இருக்கும் அனைவருமே
தன்னை போலவே நல்லவர்கள்
தான் என்ற நிம்மதியா தூங்குகிறான்..
ஓவ்வொரு இரவும்..
அவனின் பணத்தை கைபற்ற நினைக்கும்
அனைவருமே தூக்கமின்றி தவிக்கும் போது...
No comments:
Post a Comment