804-வது கவிதை படைப்பு - டீச்சர் என்னை தெரியுதா. - வார்த்தைகளின் ஆழம்

வெளியூர் செல்லும் 

விரைவுப் பேருந்தில் 

தட்டுத்தடுமாறி ஏறும் 

அந்த வயதான பாட்டியிடம் 

ஓடிச் சென்று கேட்டான் ஒருவர் 

டீச்சர் என்னை நினைவு இருக்கா..

யாரையோ அழைத்து இவங்க தான் 

எனக்கு அ...ஆவன்னா....A..B..C..D...

சொல்லிக் கொண்டுத்த 
எல்.கே.ஜி டீச்சர்.. சில நொடிகள் 

அவருடன் சிரித்த படியே புகைப்படம் 

எடுத்துக்கொண்டனர்... பேருந்தில் 

இருந்தவரெல்லாம் மகிழ்சியாக இருந்தனர்.. 

ஆனால் அந்த பாட்டியோ 

ஜன்னலோரமாக அமர்ந்து

வேடிக்கை பார்க்கிறாள்... எல்லோரும் 

அவளிடம் டீச்சர் நீங்க எப்படி இருக்கீங்க 

என்றே விசாரித்தனர்.. ஆனால் 

ஒருவருக்கு கூட உங்க பசங்க 

எங்கே இருக்காங்க உங்களை நல்லா 

பார்த்துகிறாங்களா..டீச்சர் நீங்க 

எங்கே இருக்கீங்க என கேட்க தோன்றவில்லை...

வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் 

வசிக்கும் அவளுக்கு மட்டுமே தெரியும் 

அவளின் வலிகள்...மனதிற்குள் அசைபோடுகிறாள்...

எப்படி இருக்கீங்க...எங்கே இருக்கீங்க..

சில வார்த்தைகள் தான் வித்தியாசம் 

ஆனால் அதில் இருக்கும் 

வார்த்தைகளின் ஆழம் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...