இன்னும் இரண்டு
மாசம் தான்
இருக்கு அதுக்கு
பிறகு நானும்
உன்னை முன்மாதிரியே வீட்டில்
தான் உட்காரணும்.
நமக்குள்ளே சில வித்தியாசம் தான்டா இருக்கு, மத்தபடி நீயும் நானும் ஓண்ணு தான் என்ற அப்பா காலையில் சாப்பிட உட்கார்ந்த மெல்ல பேச்சை தொடங்கினார்..
அப்பாவுக்கு சொன்னா புரியாது என்றே மகனும்.. மகனிடம் எப்படி சொன்னா புரியும் என்றும்
எத்தனையோ முறை மனதிற்குள் ஓத்திகை பார்த்து விட்டு பேசிய பிறகு வார்த்தைகள் மழை மேகமாய் முட்டிக் கொண்டு தாய் கண்ணில் மழையாக பொழிகிறது... அண்ணன் கோபத்தில் போறான் அவன்கிட்ட பேசுங்க என்னும் தங்கை ...வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகனிடம் யாருமே பேசவில்லை அவனும் கூட முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு திண்ணையிலேயே படுத்து தூங்கி விட்டான்.
ஏன்டீ புள்ள ராத்திரி பூரா பனியில் படுத்து இருக்கான்.
நான் தான் அவன் மேல கோபத்துல இருக்கேன் நீயாவது என்னவாச்சு பார்க்க வேண்டாம்.. அவனருகில் வந்து போர்வை கூட இல்லாமல் தூங்கி கொண்டிருந்தவனுக்கு போர்வை போர்த்தி விட்டார்.
தூக்க கலக்கத்திலும் அவன் முணங்குவது கேட்டதும் அம்மா, நேத்து ராத்திரி அப்பா சாப்பிடாரா.. இல்ல வழக்கம் போல என்னை திட்டிக் கிட்டே அந்த மனுஷன் தூங்கிட்டாரா. எனக்கு எப்போ நல்ல வேலை கிடைக்க போகுதோ அதுவரைக்கும் அந்த மனுஷன் என்னை கரிச்சு கொட்டிக்கிட்டேத தான் இருப்பாரூ..
அம்மாவிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசிய அவனின் வார்த்தைகளை கேட்டவருக்கு ஏதோ ஓர் குற்ற உணர்ச்சி மேலிட்டது.
ச்சே தூக்கத்தில் கூட என்னைப் பத்தியும் என்னோட வார்த்தையும் இவனை இவ்வளவு தூரம் காயப்படுத் இருக்கா என்றவாறே பல்துலக்கி விட்டு வந்தவர்.
சமையல்யறையில வந்த மனைவி தந்த காபியை கையில் வாங்கினார்.
ஏன்டீ நான் என்ன நம்ம புள்ளைய ரொம்பவே திட்டிவிட்டேனா என உறுத்தலான மனதோடு கேட்டார்.
நீங்க எம் புள்ளை கரிச்சு கொட்டாம இருந்தா தான் உலகமே இடிச்சு விழுந்திடுமே அலுத்துக் கொண்டு சமையலறைக்கு உணவு தயாரிக்க சென்றாள்.
அப்பா நீங்க இங்கே இருக்கீங்களா, உங்களை நான் வீடு பூரா தேடிக்கிட்டு இருந்தேன். காலையில் எழுந்து வந்த மகள் வாசலில் உட்கார்ந்து இருந்த அவனின் அருகில் அமர்ந்தாள்.
நேத்து காலேஜில் ரொம்ப நேரம் கிளாஸ் எடுத்தாங்கப்பா.. முதல் நாள் முதல் வருஷமே இவ்வளவு கஷ்டமா இருக்கே இன்னும் நாலு வருஷம் எப்படி தான் படிச்சு முடிக்க போறேனோ தெரியலை..
அரியர்ஸ் எதுவுமே இல்லாத பாஸூ பண்ணுறது கஷ்டமான விஷயம் என்று என்னோட சீனியர்ஸ் சொன்னாங்கப்பா.
உங்க காலத்தில் எல்லாம் படிப்பை இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இருக்க மாட்டீங்க தானே என்ற போது ம்ம்ம் என்பது போல் தலையாட்டினார்.
அப்பா எனக்கு இன்னும் தூங்கமாவே தான் இருக்கு.
இந்த சனி ஞாயிறு இரண்டு நாளு தான் இனிமே லீவு மத்த நாள் எல்லாம் படிப்பு புஸ்தகம் தான் என்ற படி அவரின் மடியில் படுத்தாள்.
காபி எடுத்து வந்த மனைவியோ திட்டினாள்..என்னங்கநீங்க வீட்டில் இருக்கும் போது இந்த கழுதை ஓர் வேலை செய்யுது இல்லை..எதாவது சொன்ன உங்க முன்னாடி வந்து கண்ணை கசக்குறா நீங்களும் கழுதை மாதிரி வளர்ந்த பொண்ணை மடியில் போட்டு கொஞ்சி கிட்டு இருக்கீங்க.
உங்க இரண்டு பேருக்கும் விவஸ்தையே. கிடையாது. ஏய் என்டீ பிள்ளையை கரிச்சு கொட்டுறே இன்னும் நாலு வருஷமோ அஞ்சு வருஷமோ தானே நம்ம கூட இருக்க போறா அதுக்கு பிறகு புகுந்த வீட்டுக்கு போனா அவளுக்கும் உன்னை மாதிரியே பொறுப்பு வந்திட போகுது.
உன்னை மாதிரியே தான் உன் பொண்ணு
நான் எதாவது சொன்னா, ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிடுங்க.
பொண்ணுக்கு இவ்வளவு செல்லம் ஆகாது... இந்தாங்க காபி பிடிங்க.
இப்போ தானடீ குடிச்சே..இது உங்க மகாராணிக்கு. அவங்களுக்கு தூங்க களைப்பு போன பிறகு எழுந்திருப்பாங்க அப்போ அவளுக்கு ஊட்டி விடுங்க சரியான தறுதலை லீவு நாளில் பெத்தவளுக்கு ஏதாவது உதவி செய்யணும் என்று தோணுதோ சிடுசிடுப்புடன் சென்றாள்..
அப்பா உன் பொண்டாட்டிக்கு என்னாச்சு காலையிலேயே உன்னை திட்டிவிட்டு போறாளா..
ஏய் திருடி அப்போ இவ்வளவு நேரம் நீ நாங்க பேசுறதையெல்லாம் கேட்டு கிட்டு தான் இருந்தீயா.
பிறகென்னப்பா இரண்டு நாள் லீவுல கூட பாத்திரம் கழுவு வீடு துடை துணியை துவைச்சு போடுன்னு இம்சை பண்ணுறா.
சரி அதை இப்படி கொடு என்றாள்.
ஏய் குட்டி கழுதை பல்தேச்சுட்டு தான் காபி குடிக்கும் என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...
அப்பா நான் உன் பொண்ணுப்பா நீ சொன்ன எதையும் மறக்க மாட்டேன் நீ சொல்லி கொடுத்த படி தான் செய்வேன்.அப்போவே பல்துலக்கிட்டேன்.. அரக்கி கிட்ட இருந்து தப்பிக்கத்தான் இந்த நாடகம்.என்றவள்.
அப்பா நான் ஒண்ணு சொன்னா நீங்க கோபிச்சுக்க மாட்டீங்கன்னா நான் சொல்லுவேன்.
சொல்லு தங்கம் நீ சொல்லி நான் எதையாவது மறுத்து இருக்கேனா.. உனக்கு என்ன வேணும் சொல்லு.
எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா, ஆனா நீங்க அண்ணனை வேலை போகலை என்று தினமும் திட்டிக்கொண்டே இருப்பதை என்னால் பொறுத்துக் முடியலை நேத்து என்னை காலேஜில் இருந்து கூட்டிக்கிட்டு வரும் போது அண்ணன் முகம் எப்படி வாடிப் போய் இருந்துச்சு தெரியுமா.
ஏன்ம்மா உன்கிட்ட ஏதாவது சொன்னானா.
இல்லைப்பா, நீங்க அவனை கஷ்டப்பட்டு படிக்க வைச்சீங்க அவனும் நம்ம குடும்பத்தோட நிலைமை தெரிஞ்சு யாரிடம் பேச கூட மாட்டான் தெரியுமா.. ஏன்டா அமைதியா இருக்கேன் கேட்டேன்.
பாப்பா நீ அப்பாகிட்ட சொல்லு ஓர் வேளை இந்த மாசத்துக்குள்ள வேலை கிடைக்காம போன என்று கண்கலங்கினான்..
வேற எதுவும் சொன்னா..
இல்ல அப்பா.. நான் எங்கேயாவது போனா என்னை தேடாம உன்னால் பார்க்காம இருக்க முடியுமா பாப்பான்னு கேட்டான்..
ஏன்டா இப்படி கேட்குமே ன்னு சொன்னதுக்கு நான் படிச்ச படிப்பு... இந்த கம்பெனி வேலைக்கு தான் சென்னை பெங்களூர் போனா தான் வேலை கிடைக்கும் ஆனால் என்னால் உங்களை பார்க்காம ஓர் நாள் கூட இருக்க முடியாதேன்னு வருத்தமா சொன்னான்...
சரிம்மா இனிமே அவனை அதிகமா திட்ட மாட்டேன் என்றது சரி நான் போய் அரக்கிக்கு உதவி பண்ணுறேன் இல்லாட்டி வேண்ணும்னே காலை சமையலை லேட் பண்ணுவா என்றாள் வாயாடி மகள்.
தகவலை மிக எளிதாக சொல்லி விட்டு போன மகள்..இதோ மாதிரி தானே எனக்கும் வேலை கிடைக்காம கஷ்டப்பட்ட போது, அப்போது அவர் மனதில் தோன்றிய விஷயங்களை நினைக்க நினைக்க மிகவும் பயமா இருந்தது.
தூங்கி கொண்டிருந்த மகனின் முகத்தை பார்த்தார்.கல்லூரி முடித்தவன் என்பதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் அவ்வளவு அப்பாவியான முகம்..
சிந்தனைகள் பலவிதமாக மனதில் அலையடித்தது, மெல்ல எழுத்தவர் தட்டுத்தடுமாறி நடந்தவர் ஏதோ ஓர் சிந்தனையில் வாசலில் தடுமாறி விழுந்தார்.
அவர் விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே சமையல் வேலை பார்க்கும் போது ரேடியோவை அலற விட்டபடி இருந்தவர்களுக்கு கேட்டு இருக்க நியாயமில்லை.
ஆனால் நொடியில் அப்பா என்னப்பா ஆச்சு உனக்கு நேத்து மாத்ததிரை நேரத்துக்கு சாப்பிட்டீயா.. இல்லை என் நினைப்புலையே.. அன்பும் அக்கறையுமாக கேட்டவனின் வார்த்தைகளில் தனது இளமை காலத்தை நினைத்து சிரித்தார்.
சாப்பிட்டேன் தம்பி, அப்பா இனிமேல் உன்னை ரொம்ப திட்ட மாட்டேன்டா..நீ எதுவும் தப்பான முடிவு எடுத்திடாதே அதற்கு மேல் பேச இயலாதபடி அவனின் கண்கள் கலங்கி இருந்தது..
நான் எந்த தப்பான முடிவு எடுக்கலைப்பா... நேத்து நண்பனோட அப்பா ஓர் கம்பெனி தொடங்குறாரூ.அவருக்கு ஓர் சூப்பர்வைச்சர் தேவைன்னு கேள்வி பட்டேன் அதான் போய் பார்த்து பேசிட்டு வந்தேன் அடுத்த வாரத்தில் இருந்து வரச்சொல்லி இருக்காங்க.
என்ன கம்பெனி என்றார், புதுசா தொடங்குறாங்கப்பா..
வீடுகளுக்கு தேவையான சோலார் பேனல் தயாரிச்சு விற்பனை செய்ய போறாங்களாம்.. அதான்
கைத்தாங்கலாக பிடித்த படி அவரை திண்ணையில் அமர வைத்தார்.. ஏன்ப்பா நீங்க எதுவும் கனவு கண்டீங்களா.என்றது
அவனின் கன்னத்தை அன்பாக தடவினார். நான் உதட்டில் தான் உன்னை திட்டினேனே தவிர நீ வெளியூர் வேலைக்கு போனா உன்னை பார்க்காம எங்களால் இருக்க முடியாதுடா தம்ப என்றபடி அவனின் மார்பில் சாய்ந்தார்.
எனக்கு பிறகு இந்த வீட்டிற்கு நீ தான்டா பொறுப்பா பார்த்துகிடணும் என்றவரை எப்போதும் எதிர்த்து பேசும் அவன் சரியென்றான்.
தூரத்தில் முருகன் கோவிலில் ஸீபீக்கரில் பாடல் ஒலித்தது.
“”””””””” ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு…
உற்றார் பெற்றாரும் உண்டு…
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்…
நீ வாழ இடமும் உண்டு…
தாயுண்டு மனம் உண்டு…
தாயுண்டு மனம் உண்டு…
அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு””””””””
No comments:
Post a Comment