அம்மா தாயே
சாப்பிட்டு நாலு நாளாச்சு
ஏதாவது இருந்தா குடுதாயீ...
கையில் குழந்தையோடு
பிச்சையெடுக்கும் பிச்சைகாரி..
சற்று தூரத்தில் தலையை
சொரிந்தபடி பிச்சை எடுக்கும்
இன்னொரு பிச்சைக்காரன்...
ஓர் கையில் சிறு துடப்பத்துடன்
ஏதோவொரு துணியுடன்
ஓட்டிய தூசியை கூட துடைக்க
நேரமின்றி பணப்பந்தயத்தில்
ஓடும் மனிதரின் பல லட்சம்
காரை துடைத்து விட்டு செல்லும்
ஒர் திமிரு பிடித்த சிறுவன் யாரிடமும் பணத்தை கேட்கவே இல்லை...
சில நொடி சிக்னலில் வேகமாக
விரைந்து சென்ற அந்த சிறுவன் ..
யாருமே காசு தரவில்லை என்ற போதும்
சிரித்தபடியே மறுபக்கம் சென்று
காரை துடைத்தான்.... தூரத்தில்
இருந்து வந்த ஓர் மனிதர்
தனது சட்டை பையில் இருந்து
எடுத்துக் கொடுத்தார்...
2,000 ரூ நோட்டு... சார்
இது ரொம்ப அதிகம் என்றான்...
அவரோ புன்னகையுடன்
சொன்னார்..உன் உழைப்பு
இது சரியான ஊதியம் தான்...
தூரத்தில் பாட்டுச் சத்தம் கேட்டது
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் வசிக்கிறான்...
No comments:
Post a Comment