808-வது கவிதை படைப்பு சூரசம்ஹாரம்

 

வீட்டில் நடக்கும் 

அம்மா அப்பா

சண்டையை வெளியே 

சொன்னால் வெட்கக்கேடு 

தன்னையே நினைத்து 

உருகும் இருகாதலிகளை 

பற்றி கூட நினைப்பேதுமின்றி 

மனதின் கோபத்தை அடக்கிக் 

அதனையே வீராமாக்கி...

சூரனை அழிக்க கிளம்பிய 

குறிஞ்சி நிலத்தின் அதிபதி

தங்களின் மாயவிளையாட்டை 

அறியாத பாலகனுக்கு...

தாயும் தந்தையும் அன்பாய் 

வழங்கிய சக்திவேல்.... பெற்றவர்களின் 

செல்லச்சண்டையை உண்மையென்றே

நம்பிய கள்ளமில்லாத குழந்தையவன்...

எதிரியின் கண்ணுக்கும் சிறுவனாய் 

தெரிந்தவனின் ஆற்றலை உணர்ந்து 

மரமாகிப் போன சூரனின் அரக்க குணத்தை வேலெறிந்து  மயிலும் சேவலென்ற இரண்டாக்கிய 

திருச்செத்தில் ஆண்டவன்...

பக்கத்தில் துணையாக 

சேவலும் மயிலும் .. விண்ணை பிளக்கிறது மக்களின் ஆரவாரம் 

வெற்றிவேல்.. வீரவேல்...

முடிந்தது சூரசம்ஹாரம் 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...