மிகவும் கூட்டமான
கல்யாண வீட்டின்
நெரிசலில் பக்கத்தில்
இருப்பவரை கூட
கவனிக்காமல் மொய்
கொடுத்து விட்டு அடுத்த
கல்யாணத்துக்கு போக
விரைந்து செல்லும்
மனிதர்கள் கூட்டம்
இன்னிக்கே சரியான
முகூர்த்தம் அசடு வழிந்த
சிலரில் முக்கியத்தஸர் ஓருவர்
கூட்டத்தை விலக்கிக் கொண்டு
விரைந்து வந்தாள் அக்கா மகள்
உன்னை எங்கெல்லாம்
தேடுவது..இந்தா பிடி
பத்திரமா வைச்சுக்கோ..
அம்மா பாரத்தா திட்டுவா.. நா
வீட்டில் வந்து வாங்கிக்கிறேன்..
கை நிறைய சாக்லேட் கொடுத்தாள்...
பக்கத்தில் வந்த அக்கா
சொன்னாள்.. உனக்கு
அறிவே இல்லையா..
பாப்பாவுக்கு என்று
சொல்லி இவ்வளவு
சாக்லேட் எடுத்தீயா...
தூரத்தில் இருந்து
சைகை செய்தால்
நீ எதுவும் சொல்லாதே
வீட்டில் வந்து அப்பா
முன்னாடி நீயே கொடு
பக்கத்தில் அக்காவோ
முறைத்து பார்த்தாள்..
கேட்ட கேள்வி பதில்
சொல்லுடா எதுக்கு
இத்தனை சாக்லேட்
யாருக்காக எடுத்தே....
No comments:
Post a Comment