இருபதின் காதல்
உடலை ரசிக்கிறது....
முப்பதின் காதல்
இல்லாத இடத்தில்
ஓர் இடம் நில்லாமல்...
அன்பை தேடுகிறது
நாற்பதின் காதல்
அணில் போல சேர்த்த
காசை காப்பாற்ற
துடிக்கின்றது........
ஜம்பதின் காதல்
பிள்ளைக்காவே
பரிதவித்து அலைகிறது....
அறுபதின் காதலோ
ஆசையை கடந்து
உடன் இருப்பருக்காகவே
வாழ வைக்கிறது....
கடல் கடந்து சென்ற
குழந்தைகளை தெருவில்
போகும் அனைவரிடமும்
தேடிப் பார்த்து
வெறுமையாக சிரிக்கிறது
விட்டுக் கொடுப்பதும்
தட்டிக் கொடுப்பதும்
என்றே வயதான பருவத்தில்
உயிரின் உணர்வாய்
மாறிவிட்ட பொய்மை
தவிர்த்து கோபம்
கடந்து அன்பில்
செழித்த காதல் -
எழுத வரிகள் இல்லை....
கிழவனுக்கு கிழவியும்....
கிழவிக்கு கிழவனும்....
அன்பு வழிந்தோடும்....
முதிர்ந்த காதல்....
No comments:
Post a Comment