பித்தா பிறை சூடி பெருமாளே

கடந்த காலத்து

கவலையும் இல்லை...

எதிர்காலத்தை கண்டு

பயமும் இல்லை....

கடந்த நூற்றாண்டின்

ஏடுகளை தேடி எடுத்து

நிகழ்காலத்துடன் 

ஒப்பிட்டு வாழ ஆசையில்லை

நான் ஒன்றும் இலக்கணம்

கற்று தலைகனத்தில் 

சுற்றும் போலி கவிஞன் அல்லவே....

கிடைத்த பேனாவை 

கொண்டு கிழிந்த

காகிதத்தில் பார்த்த

விஷயங்களை பொதிந்து

வைக்கும் பைத்தியக்கார

ஜோல்னா பையனின்

ஓர் சாதாரண ரசிகன்.....

ஆணவமும் வேண்டாம்....

அதிகாரமும் வேண்டாம்....

போலியாய் புகழும் 

மேடைகளும் வேண்டாம்....

காகித பூக்கள் கசந்து விடும்...

சில நாட்கள் மலர்ந்து மணம்

பரப்பும் மலர்களே போதும்

போலியான பொய்யுரைகளும்

ஜிகினா போன்றவைகளும்

சராசரி மனிதனையும்

சந்திர மண்டலத்துக்கு

இழத்து சென்று விடும்....

மக்களுடன் மக்களாய்

வாழ்ந்து அவர்களின்

வாழ்க்கையை எழுத்தில்

பிதற்றும் நான் சாமானிய

பித்தன்....... ஏனென்றால்

நான் வணங்கும் கடவுளையும்

சுந்தர தமிழில் அழைத்தான் 

அன்புடன் அந்த சடாமுனிக்கு

மிகவும் பிடித்தமான பெயரில்

பித்தன்... அன்புடன் கோபத்தில்

அழைத்த பெயரை ஆசையாய் 

சூட்டிக் கொண்டார்...

தமிழ் எடுத்து பாடச்செய்தார்....

உலகத்தை நாட்டமுடன் நாடச்செய்தான்

பித்தா...பிறை சூடி ..

பெருமானே.... அருளாளா...


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...