அன்பா? அதிகாரமா?

அன்பு அதிகாரம் செலுத்தாது, அதிகாரம் செலுத்தும் இடத்தில் அன்பு இருக்காது..

அன்பும் அதிகாரமும் எதிர் எதிர் துருவங்கள்.அதை புரிந்து கொண்டு வாழ்வதில் இருக்கின்றது மகிழ்ச்சி.

வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியை இரண்டு முறை விளையாட்டாக அடித்தாலும் அது தன் கோபத்தை காட்டிவிடும்...

ஆனால் சற்று நேரம் கழித்து வாலை குழைத்து வந்து நிற்கும் அதுவே இயற்கை இயல்பு...

மிருகங்களுக்கு தன் கோபத்தை காட்டுவதிலும், பின்னர் தனது இயல்பான சுபாவத்திற்கு மாறுவதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் மனிதன் தான், தனது கோபத்தையும் அன்பையும் எரிச்சலையும் இன்ன பிற குணாதிசயங்களையும் மறைத்து போலியாக சிரித்து, மனதில் தன்  விஷமத்தை விதைத்து வைக்கிறான்.

பிரச்சினைகள் அப்போது முளைக்கிறது. அறிவியல் கூற்றின் படி ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.

பல நோய்களுக்கு காரணம் மன அழுத்தம். மனதில் ஆசைகளை வைத்து கொண்டு, அடுத்தவரை மகிழ்ச்சி படுத்த வேண்டி நடிக்கும் போது.

உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு வாழும் போலி வாழ்க்கையில் சிறைப்பட்டு அவஸ்தைப்படும் நிலை.

நீங்கள் யாருக்காகவும் வாழுங்கள், அதில் பிரச்சினை இல்லை. ஆனால் உண்மையாக வாழுங்கள்.

பொய்களை மனதில் வைத்து கொண்டு உண்மையை, உடன் இருப்பவரிடம் தேடாதீர்கள். நீங்களே உங்களுக்கு உண்மையாக இல்லாத போது எப்படி அடுத்தவர்கள் உங்களின் எதிர்பார்ப்பின் படி வாழ முடியும்.

ஏனென்றால் அவர் உங்களின் நண்பர், உங்களை போலதான் இருப்பார்.


என்றோ நடந்த ஓர் சிறு செயலுக்காக பேசாமல் போவது அல்ல அன்பு...

இருபத்தி நான்கு மணி நேரமும் பேசிக் கொண்டே பழகுவது இருப்பதும் அல்ல அன்பு/ நட்பு /  உறவு.

ஆபத்து காலத்தில் உதவுவதே அன்பு நட்பு எல்லாம்.

அன்பு என்பது சில நொடி பூத்து விடும் மலர்... அதற்கு எந்த சேதமும் தெரியாது.

அது என்றுமே வாடாது, நாளொரு மேனியும் அந்த அன்பு மலர் மலரவே செய்யும்...

போலியான காகித அன்பு, மிகவும் பளபளப்பாக தெரிந்தாலும் சில நாளில் அதன் நிறம் வெளிரிவிடும்....

ஏழையாக இருந்த போதிலும் வீடு தேடி வந்த உறவுகளே உண்மையான உறவுகள்.

இன்று கிடைத்து விட்ட பதவியும், பணமும் தேடி ஆயிரம் சொந்தங்கள் வரலாம்.

ஓன்றை மறந்து வீடாதீர்கள், போலியாக வாழ்ந்து பழகிவிட்டால், எதிராளி உண்மையாக இருந்தாலும் சந்தேகம் மனதில் அலையடிக்கும்.

அதற்காகவாவது உண்மையாக வாழந்து பழகுங்கள்.

கோபம், எரிச்சல் என்ற மனிதனின் உண்மை உணர்ச்சிகளை திரையிட்டு வாழும் வாழ்க்கை எதற்காக...

போலியாய் வாழ்பவர்களே அதிகாரம் செய்யாதீர்கள்.. அன்பு செய்யுங்கள்...

அன்பே உலகை ஆளும்... அதிகாரம் என்பது பதவி இருக்கும் வரை மாத்திரமே..


சிந்தியுங்கள்...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...