ஆடல் நாயகனே...
விநாயகனை தொழச் செய்து
ஆட்டத்தை தொடங்கி வைத்த
எந்தன் தலைவனே...
எங்களின் மன்னவனே...
நடனமிட பயிற்றுவித்தாய்
நடராஜா என்றழைத்தேன்...
பாடலின் வரிகளுக்கு
அர்த்தம் புரியும் முன்னே
சலங்கையை காலில் கட்டி...
சின்னஞ்சிறு வயதினிலே
உனதடியில் பணிய வைத்தாய்...
என்மீது உனக்குத்தான்
எத்தனையோ நம்பிக்கை...
மன்னவரும் என் நடனம் கண்டு
உவப்புடனே சந்தோஷமாய்
பெருமையுடன் பேச வைத்தாய்
குருவின் புகழை
பாரெல்லாம் பரவச் செய்தாய்...
காண வைத்தாய்
நாட்டியம் ஆடும் போது
ரசித்திடும் மக்கள் கூட்டம்
அத்தனையும் தந்தவனே...
மயங்கிட வைத்தவனே...
மாதவனின் மறுவடிவே...
மாயக்கூத்தனே...
மயில்களும் முனிவரும்
தேடுகின்ற மலையரசே...
வாழ்க்கையென்னும்
மாயையில் மயங்கிடாமல்...
நாட்டியத்தில் பரிமளிக்க
வரமளிக்க வேண்டுகிறேன்...
வர வேண்டும் வரவேண்டும்
உன்னை உள்ளத்தில் நித்தமும்
துதிக்கின்றேன்.. விரைவில்
வந்திடுவாய் வந்திடுவாய்
நடராஜபெருமானே...
சிவகாமியின் மணாளனே...
கைலாச நாதனே...
பேரின்பம் கொடுப்பதாய்
சொன்னாயே சிற்றின்பத்தில்..
திளைக்க விடுவதென்ன...
சீக்கிரமே வந்திடப்பா
நாட்டிய பேரொளி என்று
பட்டம் கிடைக்கும் முன்னே...
நர்த்தகியாய் ஆடுகிறேன்...
உனதடியில் பணிந்திட
ஆசையாய் தொழுகின்றேன்...
நடராஜா உனதடியே சரணம்
No comments:
Post a Comment