பரிமளா கேசவ்

 கதை எழுத்துருவாக்கத்தில் .. மிகவும் அருமையாக கதை படிக்க தவறாதீர்கள்..

கூடிய விரைவில் பதிப்பு...

உண்மையை சொல்லிடுங்க, இல்லாட்டி...அதிகாரமும் ஆணவமும் கலந்த குரலில் எதிரில் நின்று கொண்டிருந்த பரிமளா பயப்படும் படியாக ரவீந்திரன்... 

சார், அந்த பொண்ணு நிச்சயமாக தப்பு பண்ணியிருக்க மாட்டா...பரிமளாவுக்காக இரக்கத்துடன் பேசிய கிரிஜா....

இங்க, பாருங்க கிரிஜா நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. ஆனால் இன்று ராத்திரி எட்டு மணிக்குள் எனக்கு அஞ்சு பவுன் சங்கிலி வரணும் இல்லாட்டி... நான் சொன்ன மாதிரி நடந்துங்க சொல்லுங்க...மத்த விஷயத்தை நான் பாத்துக்கிறேன்...

வெறுப்பாக பேசிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்த ரவீந்திரன்...

என்னப்பா, காலையிலேயே பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்ட போல.... தினமும் யாரையாவது ஓருத்தரை பிடிச்சு அரைமணிநேரம் அட்வைஸ் பண்ணாம உனக்கு தூக்கம் வராதா????

இல்ல முதலாளி, அடுத்த வாரம் பொங்கல் வருது.. இந்த பொம்பள பிள்ளைக்க எல்லாம்...போனஸ் பத்தி நேத்து சாப்பாட்டு நேரத்துல பேசிக்கொண்டு இருந்தார்களாம்.... அப்போ இந்த பரிமளா, எட்டு வருஷமா உழைச்சு எந்த பிரோஜனமும் இல்லை... அப்படின்னு கூட இருக்கிற பொண்ணுகள்கிட்ட சொல்லிட்டு இருந்திருக்கா....

அதுக்கு என்னையா இப்போ, வழக்கமான அவங்க எல்லாம் பேசுற பேச்சுதானே....

ஐயா, இன்னிக்கு சாயங்காலம், அமெரிக்கா படிச்சுட்டு வர்ற சின்னவர் பாராட்டு விழா நடக்க போனதில்லை....

ஆமா, என் பொண்டாட்டி தொந்தரவு தாங்க தான்னய்யா...இந்த ஏற்பாடு எல்லாம்...அதுக்கு வேற தண்ட செலவு இரண்டு லட்சம்... பெரிய கடைக்கு முதலாளியா இருந்து என்ன பிரயோஜனம் வீட்டில் பொண்டாட்டி பிள்ளை மதிக்க மாட்டேங்குது.... விரக்தியாக பேசிய சமுத்திரகனி..

ரவீந்திரன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.... இந்த மாதிரி ஆளுங்க இருக்கிற வரை நம்ம மேனேஜர் பதவிக்கு ஆபத்து இல்லை...அட, கலக்குற ரவி, அடுத்தவங்களை சரியா இடை போட்டு அவங்க வீக்னஸ் பார்த்து கேம் விளையாடுறே...நீ பெரிய ஆளுதாண்டா..... மனதிஐஅ தன்னை தானே புகழ்ந்து கொண்டான்...

உங்க அப்பனை விட, நீ பெரிய புத்திசாலி... கடைசி வரை அவர் மனசுலே இருக்கிறதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது...அப்பனுகங பிள்ளை தப்பா பிறந்திருக்கே..... பாட்டி இருளாயி சொன்னது நினைவுக்கு வந்தது...


ஏன்னையா, கல்லாய நிக்குறே.. மேலும் சொல்லு ரவீந்திரனை சுயநினைவுக்கு இழுத்து வந்த முதலாளி சமுத்திர கனி...

இந்த பரிமளா பொண்ணு.. எல்லார் முன்னாடியும் சம்பள உயர்வு பத்தி பேச போறாளாம்...

யோவ், என் மகனே நேத்து தானே வந்திருக்கான்... அவனுக்கு வியாபார நெளிவு சுழிவு தெரியாதுய்யா...

ஆனா, அவர் ரொம்பவே இளகிய மனசுகாரர்... ஏதாவது சம்பளத்தை அதிகமாக கொடுக்கிறதா.. சொல்லிட்டா...

யோவ், எதுக்கு இப்போ என் வயித்துல புளியை கரைக்கிறே... இப்படி எல்லாம் வரும்ணு தெரிஞ்சு தான்..ஏழை வீட்டில் பிள்ளைகளை வேலைக்கு சேர்த்திருக்கேன்....

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...