சில நிமிட காத்திருப்பு
பொறுக்க முடியாமல்
பத்து பேர் முன்னால் - அவனை
அவமரியாதை செய்த
கடன் கொடுத்தவர்....
"மகனை யாரோ
ஏசிவிட்டது" தெரிந்து
தனது பலவருட
கனவு வீட்டை கூட
விற்க தயாராகும்
அவனின் பாசக்கார தந்தை....
ஏனோ இன்னும் எனது
நண்பருக்கு புரியவில்லை
நடுத்தர வர்க்க தந்தையின்
நிலைமை அணுபவித்தால்
மட்டுமே புரியும் --- கண்கண்ட
தெய்வம் தந்தை...
No comments:
Post a Comment