வித்யா கர்வம்

 

வணக்கம் நண்பரே,
இது வரையில் நான்  கவி சோலை என்று  சென்று என் கவிதைகளை  படித்ததில்லை..


ஏனென்றால் என் நாவில் குடியிருக்கும் சரஸ்வதியை விற்க எனக்கு இஷ்டமில்லை...


கிரகங்களின் பிடியில் வேதனையில் தவித்து வேண்டி அழுத போது,....

நானிருக்க அழுவதேன்??? 

ஆசையாய் வந்து எனது நாவில் அமர்ந்தவள்.... 

இன்று எனக்கு வெள்ளை பட்டுடை.. திரைச்சீலை விலகும் முன்பே தரிசனம் தந்தவள்....

சொன்னால் பைத்தியம் என்று பட்டம் கட்டுவான்....

கற்சிலை மனதை கரைத்து தமிழென்று கனிவுடன் அமுதம் தந்தவள்....

அன்புடன் கேட்டால் கவிதைகள்  அள்ளித்தருவதில் அவளுக்கு தான் எத்தனையோ இன்பம்..... என் தேவியின் குணம்...

எழுதுவது நானல்ல என்னுள் இருந்து என்னை இயக்கும் கலைவாணி....

அவளின் பாதத்தை விட பெரிய சுகம் ஏதும் உண்டோ இப்பாரில்.......
எனக்கு *வித்யா கர்வம்* அதிகம் தான்...
எனக்கு நிகர் நான் மட்டுமே....



No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...