தயிர் சோறு...

 டேய் நில்லுடா.... இங்கே இப்படி வாடி செல்லக்குட்டி... ஏன் தங்கம் உனக்கு என்ன கோபம்... மாம்பழகலர் பட்டுச்சேலை வெளிர் பச்சையும் மஞ்சளும் கலந்த ரவிக்கை அதில் தான் பலவகையில் ஜிகினா வேலைப்பாடு... இரண்டு வருஷமாச்சு போன வாரம் தான் உங்க அண்ணன் எடுத்து கொடுத்தாரு என்று கேசவனின் தங்கையிடம் அண்ணன் பற்றி குற்றம் சாட்டிய காயத்ரி...

பக்கத்தில் வேகமாக ஓடி வந்த மகனை பிடித்த இழுத்தாள்...

ஏம்மா... ப்ளீஸ்.. இன்னிக்கு ஓரு நாளாவது என்னையை இடைஞ்சல் பண்ணாம இரு.. அதான் உன் இஷ்டப்பட்ட மாதிரியே கோடாசூட் போட்டுகிட்டேனே.... பாரு எப்படி வேர்வை எரிச்சலா இருக்கு....

அம்மா உனக்கு ஓரு ரகசியம் வைச்சிருக்கேன்...நீ தனியா வந்தா மட்டும் தான் தருவேன்.. தங்கச்சி ரம்யாவுக்கு அது கண்டிப்பா கொடுக்கவே கூடாது...

மஞ்சள் நிறத்தில் இரண்டி உயரத்தில் நின்று கொண்டிருந்த பெரிய மனுஷனின், உதடுகளில் எச்சில் வடிந்தது... அம்மாவின் சேலை முந்தானையை பிடித்து கொண்டு, கணவன் கூட தொடபபயப்படும் அவளின் இடையில் முகத்தை அழுத்தி கேட்டான்... எனக்கு வெட்கமா இருக்கு...

அதுக்கு தானேடா செல்லம், அம்மா உன்னை தனியாக வர சொல்லுறேன்...

திருமண மண்டபத்தில் சில நிமிடங்களில் அனைவரும் அறிய தனது தாய் பாசத்தை அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, சுற்றி இருந்த அனைவரையும் வெட்கத்தில் முகம் சிவக்க வைத்தான்... ராகுல்...

ஏய் சனியனே, நல்லா பாரு.. உன் வயசு பையன் அவங்க அம்மா மேல எவ்வளவு பாசமா இருக்கான்.. நீயும் தான் இருக்கீயே...எப்ப பாரு...ஏதையாவது வாங்கி கொடுக்க சொல்லி உயிரை எடுக்கிறே...

நீ கொஞ்சம் சும்மா இருக்கீயா, நாலு பேர் முன்னாடி என் இமேஜ் கெடுக்கிறதே உன் வேலயா போச்சு.... உன் ஏச்சு பேச்சுக்கு எல்லாம் நான் அப்பா மாதிரி தலையாட்டுவேன்னு நினைக்காதே...ஏதோ கூட்டமாக இருக்கேன் பார்த்தா ...ரொம்பதான் திமிரா பேசுறே....கெளசல்யா தன் மகனின் பதிலால் நிலை குலைநது போனாள்...

என் வீட்டுக்காரர் தான் எல்லா முடிவு எடுப்பார், என்னை அவர் மதிப்பதே இல்லை என்று சற்று நேரத்திற்கு முன்பு தான் அத்தை மீனாவிடமும் தாத்தா பாட்டியிடம் சொல்லி கண்ணை கசக்கினாள்..

அவர்கள் கூட தன் பங்கிற்கு மாப்பிள்ளை சரவணனுக்கு புத்திமதி சொல்லியது நினைத்து கைக்குட்டையை முகத்தில் வைத்து மறைத்தபடி சிரிப்பை அடக்க முடியாமல், எதிர் வரிசையில் தனது மதினியிடம் கண்களால் சாடை செய்தாள் கல்லூரி படிக்கும் பார்வதி...

பக்கத்தில் இருந்த கெளசல்யாவின் கணவன் ரங்கராஜன் கூட எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார்.

இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், இந்த அரிச்சந்திரன் மகாராஜா முன்னாடி எல்லாம் உன் வேஷம் பல்லை காட்டி விடும்... என் பையன் என்னை விட ரொம்ப தைரியசாலி... சந்தர்ப்பம் பார்த்து ஊசியால் குத்தி காட்டினான் ரங்கராஜன்..

அதற்குள் ராகுல் தனது அம்மாவின் முந்தானையை பிடித்தபடி மணமகன் அறைக்குள் சென்றான்...

பார்த்தியா, உங்க மதினி தன் பிள்ளையை எவ்வளவு பாசமா பார்த்துகிறா... நம்ம வைஷ்ணவி ரொம்பவே கொடுத்து வைச்சவதான்.....

மணமகளின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது.....

ஏன் பையன் கூட அதிர்ஷ்டசாலிஷ தானே.. வைஷ்ணவி மாதிரி தங்கசிலை எங்களுக்கு கிடைச்சிருக்கே.... மணமகன் அருண் பற்றி பேசி பெருமைபட்டாள் புது மாமியார் ராகினி...

டேய் கதவை மூடிவிட்டு வா.... அறைக்குள் வந்தவுடன் குரலில் கொடூரம் தெரிந்தது..

தான் வசமாக சிக்கி கொண்டது நினைத்து வயிற்றில் புளியை கரைத்தது...

இங்கே ஏதாவது சத்தம் போட்டு ஊரை கூட்டினே, அவனின் தொடையை பிடித்து கிள்ளினாள்...

அம்மா, வலிக்குது...ப்ளீஸ்மா... நான் தான் எதுவுமே தப்பு பண்ணலையே... எதுக்கு கிள்ளுறே..... சொல்லு....கதறினான் கண்ணீர் மல்க ராகுல்...

செருப்பு பிஞ்சுரும், நாயே.....எதிர்த்தா பேசுற... வீட்டுக்கு வா.... இரண்டு நாள் பட்டினி போட்டா தான் நீ எல்லாம் அடங்குவே... கோபம் மேலும் அதிகமானது .....

கதவு தட்டப்பட்டது, வெளியே ஏதாவது சொன்ன, நீ எப்படியும் வீட்டுக்கு தான் வரணும்.மனசில வைச்சுக்கோ......

கதவை திறந்தவுடன் எதிர்ப்பட்ட செல்வி...அண்ணி சின்னவருக்கு ரிசப்ஷன் டிரஸ் பீரோவில் இருக்காம், எடுத்து தாங்க....

டேய் ராகுல், இங்க என்னடா பண்ற.. எங்க என் புள்ளை உன்னை கேட்டு தேடிக்கிட்டு இருக்கான்... சீக்கிரம் கீழே போ....



will continue


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...