ஓரு தோசையை
பத்து பேருடன்
பகிர்ந்து தின்னும்
ஏழைகளின் வேதனை....
யாருக்கு புரியும்....
பத்து தோசையும்
பரோட்டா குருமாவும்
சிக்கன் கறியும் தட்டில்
எத்தனையோ வசதிகள்
செய்துதந்த பின்னரும்...
வெறுமையாக உணரும் சிலர்
பாசத்திற்கு ஏங்கி நிற்கும்
ஆசை பெற்றவர்களின்
வலியை உணர நேரமின்றி
எங்கோ விரைந்து
செல்கிறார் எதையோ தேடி
ஆண்டவன் படைப்பில்
தான் எத்தனை அதிசயம்
ஏழையின் வீட்டில்
பணமில்லை ஆயினும்
கோடிகளை தாண்டிய
பாசத்தின் நேசம்....
ஓர் தோசை குறைந்த
விட்டதாக சொன்னவனுக்கு.
பகிர்ந்து அளித்து உண்ணும்
அம்மாவும் அப்பாவும்
ஆசை அக்கா...
தோசைக்குள்ளே
குடும்பத்தின் ஓற்றுமை
No comments:
Post a Comment