நடுநிசி நேரம் மணி ஒரு மணியை நெருங்கி கொண்டு இருந்தது....
இயற்கையின் உபாதை செய்த விளைவு... வீட்டின் உள்ளே அட்டாச் பாத்ரூம் கட்டி வைத்தோம்.. இரண்டு பெட்ரூம்....இன்றோ அது மருமகன், மருமகள் வந்த பின்னர் அவர்களின் அறையாக மாறிப்போனது....
வயசான நீங்க ஹால்ல படுத்தா என்ன குறைஞ்சா போவீங்க....செல்ல மகன் கேட்ட கேள்வி கூட நியாயமாகவேபட்டது..
ஏண்டி, விஜயா... நீ போகும் போது என்னை கூட அழைச்சிட்டு போயிருக்கலாம்...... போட்டோவை பார்த்து சில நேரம் புலம்புவார்....
ஏதோ காயத்திரி, ஆசை பட்டதால் வாங்கி போட்ட மூங்கில் சாய்வு நாற்காலி, இன்று கேசவனுக்கே படுக்கையாக இருந்தது...... உனக்குத் தான் என்மேல எவ்வளவு பிரியம் மனதில் சில நேரங்களில் நினைத்து கொள்வார்.
காலை எழுந்தவுடன தாத்தா என்று ஓடி வந்து கன்னத்தை முத்தமிடும் பேரன் ஆதித்யா பேத்தி சங்கவி..... இந்த இருவரும் காட்டும் பாசத்தால் எங்கும் போக முடியாமல் தவித்தார்....
ஆண்டவா, நான் செத்து போய் விட்டால் இந்த குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படும்.... நினைத்து பார்த்தால் அவரின் கண்களில் மழை பெய்யும்.....
எப்போ பாருங்க.... உங்க அப்பா வாசல்ல உக்காந்து அழுகிட்டு இருக்காரு....யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க....
மருமகள் கொடுமைபடுத்துறா... அப்படின்னு சொல்லுவாங்க.... மனைவியின் புடவையில் சுகம் கண்ட பிறகு பெற்றவர்கள், ஏனோ அந்நியமாகவே தெரிகிறார்கள்....
ஓரு வேளை நம்ம அப்பா, அம்மாவும் இப்படி தான் நினைச்சு இருப்பாங்களோ.... திருமணமான புதிதில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைத்து அதில் மனம் சஞ்சலப்பட்டது....
கிழத்துக்கு அறிவே இல்லை.... அதான் அம்மா போன பிறகு இவருக்கு இங்கே என்ன வேலை பேசமா....காசி ... ராமேஸ்வரம்ன்னு ஊர் சுத்த வேண்டியது தானே....
அருமை மகன் புருஷோத்தமன் தன் ஆசை மனைவி சரஸ்வதியிடம் சொல்லுவது அவரின் காதில் கேட்டது.... இருந்தாலும் காது கேட்காத மாதிரி இருந்தார்....
சரிடி, இன்னிக்கு ஏதாவது ஸ்வீட் கிடைக்குமா? ஏக்கமாகவே கேட்ட புருஷோத்தமன் கெஞ்சினான்....
உங்க அப்பனை வீட்டை விட்டு விரட்டுங்க.... அவர் கொடுக்கிற பென்ஷன் பணத்தை விட நமக்கு அதிகமாகவே இருக்கு....
முதல்ல அதை செய்யுங்க.... அன்னிக்கு பிள்ளைகளை எங்க அம்மாவுக்கு அனுப்பிட்டு, நீ எதிர்பார்க்கிற மாதிரி நாள் முழுக்கவே இந்த ஸ்வீட் ஸ்டால் உங்களுக்கு தான்....
இருவரும் கொஞ்சுவது கூட காதில் விழுந்தது.....
ஆண்டவா, வயசான காலத்துல ஏன் காதில் மெல்லியதான சத்தம் கூட கேட்டு விடுகிறது..... சாய்வு நாற்காலியில் இரவு நேரத்தில் மனம் புண்பட்டு வேதனையில் துவண்டது....
பேரன் பேத்தியை பார்த்து ஓரு மாதம் ஆச்சு, தினமும் வந்து கட்டிபிடித்து முத்தம் கொடுத்து சொல்லுவாளே.....சங்கவி..."தாத்தா", நீ இல்லாம என்னால வாழவே முடியாது.... அத்தை வீட்டுக்கு போனவுடன் இந்த தாத்தாவை மறந்துவிட்டாளா? இத்தனை நாளில் ஓரு தடவை கூட போன் பேசவே இல்லையே......
என்னடா இந்த வாழ்க்கை, எந்த விஷயத்தை நினைக்க கூடாது என்று நினைத்தாரோ... அதைப்பற்றிய நினைவே மீண்டும் மீண்டும் வந்து சோகத்தை கூட்டியது.....
மேஜை மீது இருந்த போட்டோவை எடுத்தார்... அதில் தன் மனைவியுடன் பேரன் பேத்தி சகிதமாக எடுத்த கடற்கரை திருச்செந்தூர் முருகன் கோயில் புகைப்படம்.. நெஞ்சில் வைத்து அணைத்து கொண்டார்.....
சீக்கிரம் வந்து கூட்டிகிட்டு போடி..... விரக்தியாக இருந்தார்.....
பல நாட்கள், பள்ளி விட்டு வந்த குழந்தைகள் அவரிடம் அன்றுநடந்த கதைகளை அவரின் மடியில் அமர்ந்து கொண்டு சொன்னார்கள்....
தாத்தா, இன்னிக்கு ஸ்கூல்ல ராகவ் என்னா சேட்டை பண்ணினான் தெரியுமா என்றாள் கவிதா..... மூன்றாவதாக பிறந்த இரண்டாவது செல்லப்பெண்....
ஏண்டி உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே கிடையாதா.....வேர்வை நாத்தம்... போய் டிரஸ் மாத்தி விட்டு வாங்க..... என்றாள் சரஸ்வதி....
தாத்தா, என் வேர்வை அப்படியா நாறுது...என்ற கவிதாவை கட்டி பிடித்து சொன்னார்...
என் செல்லக்குட்டி, உன் உடம்புல எப்பவுமே உங்க பாட்டி வாசம் தாண்டி வீசுது என்று கொஞ்சினார்...
மருமகளோ..... எரிச்சலாக அதிகார பார்வை செலுத்தினாள்....சாகுற வயசுல பேசுற பேச்சை பாரு.....
மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்தார்..... பின் வாசல் கதவை திறந்து கொண்டு பாத்ரூமுக்கு போக நினைத்தவரின் கழுத்தில் ஓர் கத்தியை வைத்து அழுத்தினான் ஒருவன்....
ஏய் கிழம் , சத்தம் போடாதே மரியாதையா நீ நடந்து கிட்டா, நானும் மரியாதையா நடப்பேன்.நீ ஏதாவது சத்தம் போட்டே, இப்பவே உன் கழுத்தை அறுத்து விடுவேன்.....
35 வருட சி.பி.சி.ஜ.டி அதிகாரி என்பத தெரியாது, தெரிந்தால் இப்படி பேசவே மாட்டான்... சிரித்தார்....
யோவ், கிழட்டு பயலே, உனக்கு உயிர் மேல பயமா இல்லையா... மிரட்டும் தோணியில் கேட்டான்....
கொஞ்சம் தள்ளு, நான் பாத்ரூம் போகணும்.... ஆத்திரத்தை அடக்கலாம்.....
அவனுக்கு அவரை கண்டு பயம் வந்தது, ஓர் நிமிடம் யோசித்தான்.....
டேய், திருட போற வீட்டில் யாருக்காவது உன் இரக்க சுபாவம் தெரிஞ்சுது... பிறகு நம்ககு களிச்சோறு தான்.... எப்பவுமே விரப்பா இருக்கணும்.....
முதல் திருட்டுக்கு போன நாளில், மச்சான் மணி சொன்ன வசனம் நினைவு வந்தது....
யோவ், என்னையே எதிர்த்து பேசுற, குத்திடுவேன்......
அப்படி நீ குத்தினாலும் நான் கத்தி, உன்னை காட்டி கொடுக்க மாட்டேன்....நீ திருட தானே வந்தே...கொலை செஞ்சு ஏன் பாவத்தை சேர்க்கணும்....
அவரின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தது......
மனதில் ஆயிரம் சந்தேகம், அவரோ பாத்ரூம் நோக்கி நடந்தார்......
இப்படியே ஓடிப்போய் விடலாமா???
ஓரு வேளை இவர் நாளைக்கு போலீசில் புகார் கொடுத்தால்..... இல்லாத கேஸ் எல்லாம் நம்ம தலையில் வைச்சு கட்டிருவாங்க.....ஓரே குழப்பமாக இருந்தது......
ஓர் நிமிட நினைத்து பார்த்தான், அப்பா நேத்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஓர் கேக் கொடுத்தாங்க...எவ்வளவு ருசியாக இருந்துச்சு தெரியுமா.... உனக்காக நான் பாதி மிச்சம் வைச்சிருந்தேன்....
அப்புறம், அதை என்ன பண்ணின குட்டியா....
ஆமா, நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தியே, என்னை பெத்த அந்த லூசு அவ.. தான் காரணம்.. என் ஆசையை கெடுத்துட்டா.....
அம்மாவை அப்படியே எல்லாம் சொல்லகூடாது.அவ, என்ன செஞ்சா சொல்லு.....
அவளா, அவ வந்து மாமா சாயங்காலம் வீட்டுக்கு வந்த போது, நான் உனக்கு கொண்டு வந்த கேக் எடுத்து அவனுக்கு கொடுத்துட்டா......தம்பி மேல அவ்வளவு பாசமாம்....குண்டம்மா..பேச்சி...
பேரை பாரு...பேச்சி...பூச்சின்னு....
அவளின் கன்னத்தை முத்தமிட்டான்.... என் ராசாத்தி... உனக்கு என்ன வேணும் கேளு தங்ககுட்டி... அப்பா உனக்கு வாங்கியாந்து தாரேன்....
எனக்கு நீ எப்பவும் என் கூடவே இருக்கணும், நீ ஏன் ஆந்திரா போய் வேலை பார்குற... இங்கேயே வேலை பாரு....
அவளின் பேச்சில் தனது அன்னையின் வார்த்தைகள் வெளிப்பட்டது.....
உங்க தாத்தா படிக்க சொன்னபோது மண்டையில் ஏறலை.. அதான் இப்படி நீயாவது நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும்.... அதுக்கு தான் அப்பா இவ்வளவு கஷ்டப்படுறேன்....
சரி, உனக்கு என்ன வேணும் சொல்லு.....
அப்பா, எனக்கு எதுவும் வேண்டாம்... ஆனால் என் பிரண்ட் பிச்சம்மா,அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்க... அவருக்கு மூளையில் ஏதோ கட்டியாம்... ஆப்ரேஷன் பண்ண நாற்பதாயிரம் வேணும்...
என்கிட்ட கேட்டா, நான் எங்க அப்பா ஆந்திராவுல வேலை பார்க்கிறாரு... அவர் வந்தா வாங்கி தாரேன் சொன்னேன்.... இப்போ, சாமியே அனுப்பிச்ச மாதிரி நீ இன்னிக்கு வந்துட்டே......
நீ சொன்ன மாதிரி, அடுத்தவங்களுக்காக வேண்டுனா, அது கடவுளுக்கு கேட்கும் போல.......
குழந்தைகளுக்கு எப்படி பொருளாதார கஷ்டம் தெரியும்..வாங்கி ஓரு லட்சம் கடன் அடைக்கவே கப்பல் வேலைக்கு போவது.......
ப்ளீஸ்ப்பா, அடுத்த வாரம் அவங்களுக்கு ஆபரேஷன் அதுக்குள்ள நீ எப்படியாவது பணம் ரெடி பண்ணு... அவளின் கண்ணில் அப்பாவிடம் சொல்லியாச்சு.. அவர் செய்து விடுவார் என்ற நம்பிக்கை ஒளி.....
எங்க, அதுதான் லூசு மாதிரி ஊளறுது, நீங்களும் அவளுக்கு சரியா பேசிக்கிட்டு....உண்டான கடனையே அடைக்க வழியை காணும்....
அவ்வளவு பணம் வேண்ணும்னா கொள்ளை தான் அடிக்கணும்.... மறுபடியும் ஏதோ சொல்ல வந்தவளின் கன்னங்களில் அவர் விரல் பதித்தது..
No comments:
Post a Comment