இன்று அமாவாசை நிலவு வருமா? கேட்டது மன்னவன்....
எல்லோரும் பைத்தியக்காரன் என்று புறம் பேசி அவனை இகழ்ந்து உரைத்த போதிலும் ஏதாவது ஓர் எண்ணத்தில் அவன் அருகே போய் விசாரித்தார்...
சுவாமி இன்று என்ன திதி என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்....
மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லி பொற்காசுகள் பெற துடிக்கும் கூட்டம் கைகளை பிசைந்து நின்று கொண்டு இருந்தது...
இந்த கேள்விக்கான பதிலை நம்மிடம் கேட்டு இருந்தால் பதில் சொன்ன காரணத்திற்காக பொற்காசு கிடைத்திருக்கும்...
ஒருவேளை மன்னர் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்தால் ஓரு கிராமத்தை நம் பெயருக்கு தானமாக தந்தும் இருக்கலாம்.... சுற்றி நின்ற அடிபொடிகளில் மனதில் எண்ணற்ற ஆசை பொங்கி எழுந்தது....
ஒருவேளை இவன் பதில் சொல்லாவிட்டால் நாமே முன்னே சென்று பதில் சொல்லி பரிசு பெறலாம் என்ற நம்பிக்கை.......
ஆனாலும் எல்லோர் மனதிலும் சந்தேகம் இருந்தது, ஓரு வேளை இந்த சுப்பிரமணியன் விடை சொன்னால், இவனை போய் பைத்தியக்காரன் என்று சொன்னீர்களே என நம்து சிரத்தை கொய்து விடுவாரே மன்னர்.....
அம்மா, தாயே அபிராமி அவனை ஏதாவது தப்பான பதிலை சொல்லவைத்து விடு உனக்கு ஆயிரம் குடத்தில் பால் அபிஷேகம் பண்ணுறேன்.... யாருக்கும் தெரியாமல் மனதில் வேண்டுதல் வைத்த சிலர்...
.
.
.
.
.
.
கதை தொடரும்....
No comments:
Post a Comment