விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும் தான்
சாலையின் ஓரமாக நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதுகிறது. வளர்ச்சி என்ற மோகத்தில் அதிவேக வண்டிகளை அறிமுகம் செய்து விட்டது வாகனச் சந்தை
வேகம் என்ற பெயரில் வாகனத்தை இயக்கி கட்டுப்பாட்டை இழந்து வண்டி ஓட்ட கூட தெரியாத ஏழை நடுத்தர மக்களின் மீது ஏற்படும் வலிகளை தவிர்ப்போம்
சாலையின் பாதைகளில் செல்லும் வாகனங்களின் வேகம் எத்தனை
மலை பாதைகளில் செல்லும் வாகனங்களின வேகம் எத்தனை.இவை அறிவிப்பு பலகையாக மட்டும் இல்லாமல் சாலையிலும் செயல்படுத்த பட்டால் மட்டுமே சாலை விபத்துகளை தவிர்க்க முடியும்
கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவை.
விபத்து வண்டி ஓட்டி வந்தவரின் அஜாக்கிரதையால் நடந்ததா.. அல்லது வண்டி தன் கட்டுப்பாட்டை இழந்து உருண்டதா..
மலை சரிவில் இருந்த ஓற்றை மரத்தின் உதவியால் உயிர் பிழைத்தனர் பலர்.அப்படியாயின் மலை சரிவுகளில் இனி அதிக அளவில் மரங்களை வளர்ப்பது சாலை விபத்துகளை தடுக்க வழி வை செய்யுமா..
இதை பற்றி ஊடகங்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளி வந்தால் சிறந்ததாக இருக்குமா...
சனாதன, ஜாதி மத சர்ச்சைகளுக்கு விவாதம் நடத்தி நேரத்தை செலவழிக்கும் ஊடகங்களே... விபத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவோம்.
சாலை விதிகளை மதிப்போம்..பாதுகாப்பாக வாழ்வோம்
No comments:
Post a Comment