தயவுசெய்து அனாதை ஆசிரமத்து போய் உதவுறதா சொல்லி அந்த குழந்தைகிட்ட அன்பா பேசாதீங்க.
ஏன்னா நீங்க உங்களோட ஏதோ ஓர் கஷ்டத்தை போக்குவதற்காக.
யாரோ ஓருத்தர் சொல்லி அனாதை ஆசிரமத்துக்கு போய் ஓர் நாள் முழுவதும் அவங்க கூட இருந்து சாப்பாடு போட்டா கஷ்டம் போகும் என்று சொன்னதை நம்பி போறீங்க.
இது வரைக்கும் நீங்க செய்வது எல்லாமே சரிதான்.
ஆனால் அங்கே போனவுடனே, அவங்களை ஏதோ உங்க உடன் பிறந்தவங்க சொந்தகாரங்கிட்ட பேசுற மாதிரி.
சில மணி நேரம் இருந்து பேசிட்டு போயிடுவீங்க.
பிறகு எத்தனை வருஷம் கழிச்சு நீங்க அதே ஆசிரமத்துக்கு வருவீங்க என்பது உங்களுக்கே தெரியாது.
அங்கிருந்து கிளம்பிய அடுத்த நொடியே கூட நீங்க அந்த குழந்தைகளுடன் சிரித்து பேசியதை எல்லாம் மறந்துட்டு, உங்களோட தினசரி வேலையில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள்.
எல்லோரும் செய்யுற மிகப்பெரிய தவறு இது தான்.
நீங்க கொஞ்சம் நேரம் உங்களின் கஷ்டத்தை போக்குவதற்காக செய்யும் புண்ணியம் போன்ற செயல்.
அந்த செயலை உங்களோட ஏதோ ஓர் எதிர்பார்ப்புக்காக தான் நீங்கள் செஞ்சீங்க.
அந்த ஆசிரமத்தில் வாழும் குழந்தைகள் சிலர் மேடம் அந்த அக்கா, அண்ணன் எல்லாம் மீண்டும் எப்போ வந்த பார்க்க வருவாங்க என்று கேட்கும் கேள்வியில் இருக்கும் பாசத்தின் வலியை உங்களால் உணர முடியுமா...
நீங்கள் வந்து விட்டு போன பிறகு நீங்கள் காட்டிய சில நிமிட பாசத்தை நினைத்து நினைத்து அந்த அனாதை குழந்தைகள் எவ்வளவு தூரம் பாசத்துக்காக ஏங்குவாங்க தெரியுமா..
இதே மாதிரி தான் வயதான இல்லத்தில் வாழும் வயதானவர்களின் நிலையும்.
பாட்டி அடுத்த வாரமும் உங்களை வந்து பார்த்துவிட்டு போறேன். என்னை உங்க பேரன் மாதிரி நினைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று சொல்லிட்டு போயிடுவாங்க.
பலர் அதை மறந்து வாழ பழகினாலும்.
சில வயதான அன்பு உள்ளங்கள், நினைச்சு நினைச்சு கண்ணீர் விடும்.
புதுசா போன வாரம் வந்தவன் கூட நம்ம பயலை போலத்தானே.
ச்சே எல்லோரும் ஏதோ ஓர் விதத்தில் சுயநல வாதிகள் தான் என மீதி இருக்கும் வாழ்க்கையில் யாரிடம் பேசவும் பிடிக்காமல்.
அதே சமயம் ஆயிரம் பாசத்தையும் நேசத்தையும் மனதில் சுமந்த படி வாழும் வாழ்க்கை எவ்வளவு ரணமானது தெரியுமா.
நான் சென்ற ஆசிரமத்தில் ஓருவர் சொன்ன தன் மனதின் வலிகள் தான் எத்தனை எத்தனையோ.
தயவுசெய்து நீங்கள் நீங்களாகவே இருங்க.
அன்பை விதைப்போம்
No comments:
Post a Comment