எல்லாம் பணம் படுத்துற பாடு

பல நாட்களாக வேலைக்கு போகாதவன்..

ஏதோ அதிசயமாக இரண்டு நாளாக நல்ல பிள்ளை போல வேலைக்கு போய் வந்தான்..

ஆனாலும் அந்த குடியை விட வில்லை


இன்று மாலையும் சாராயம் குடித்து விட்டு வீட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு புலம்பிய படி இருந்தவனை வாஞ்சையுடன் அழைத்தால் அவனின் காதல் மனைவி

மனைவி - என்னங்க வீட்டுக்கு வாங்க தயவுசெய்து தண்ணியடிக்காதீங்க

கணவன் - வந்தா என்னடீ தருவே .அதே காய்ஞ்ச தோசை பழைய குழம்பு தானே

அவனின் தாய் - டேய் உன் பொண்டாட்டிய எதிர்த்து பேசாதடா அவகிட்ட ஆயிரம் ரூ பணமிருக்கு.

ரொம்ப பேசுனா அந்த பணத்தை அவங்க அப்பன் வீட்டுல தனகொடுத்துவாடா..

கணவன் - ஏன்ம்மா என் பொண்டாட்டிய இப்படி கரிச்சு கொட்டுற‌..அவளே தினமும் நம்ம வீட்டுக்கு எவ்வளவு உழைக்கிறா..

அம்மா- அடேய் எடுபட்ட பயலை இதை தானடா. அவ கல்யாணம் ஆன நாளில் இருந்து சொல்லுறேன்..அவ தான் உழைக்கிறா..நீ அவளோட உழைப்பை உறிஞ்சு திங்கற

பக்கத்தில் இருந்த பழைய பேப்பரை எடுத்து அம்மா மீது வீசினான்..

ஏய் கிழவி வயசான காலத்துல புருஷன் பொண்டாட்டி இடையே சண்டையா மூட்டுற

தாய் மனதிற்குள் .. அந்த பணம் கிடைக்கிற வரைக்கும் அவளை கொஞ்சி கொஞ்சி பேசுவான் இந்த லூசூம் பணத்தை எல்லாம் அவன்கிட்ட கொடுத்துட்டு.. பிறகு நம்மகிட்ட வந்து கத்தும் நீ புள்ளைய சரியான தண்ணி வண்டியா பெத்து வைச்சு இருக்கீங்கன்னு.. எல்லாம் பணம் படுத்துற பாடு

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...