அப்பா சேர்த்து வைத்த
பல கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்கள்.. அதை
தட்டிப்பறிக்க அவரை
சூழ்ந்து நின்று பலவேஷம்
காட்டும் போலிக்கூட்டங்கள்..
தம்பிக்கு அறிவே இல்லை
என்று அவரிடமும்..
உங்க அப்பா ஊதாரியென்றே
என்னிடமும் நாடகமிடும்
வேடதாரிகள்.... தந்தை மகனிடையே
கொம்பு சீவி குளிர்காய்ந்த.
இன்னும் குளிர்காய துடிக்கும்
சில ஆசாமிகள்.
எப்படித்தான்
புரிய வைப்பேன்.. அப்பனின்
ஆசையும் பாசமும் அன்பும் நேசமும்
அளவில்லாத கோபத்தையும் விட
விட பெரிய சொத்து
உலகில் ஏது.. எத்தனை முறை
எறிந்து விழுந்தாலும்
நாலு பேர் அறிய திட்டினாலும்
மறக்கவுமில்லை மறைக்கவுமில்லை
சின்னஞ்சிறு வயதில்
என்பின்பே சைக்கிளை பிடித்த படி
ஓடிவந்த அந்த கள்ளமில்லா
தகப்பனை மனதார நேசிப்பதால்
தானே உண்மையான
பேசுகிறேன்..அவரோ நீ இப்படி
நல்லவனாக இருந்தா உலகம்
ஏமாத்திடும் என்றே அழாமல்
புலம்புகிறான்... உங்க அப்பாவும்
இப்படித்தான்டா இருந்தார்
மதிய சோறு பரிமாறும் போது
அம்மா சொன்ன வார்த்தைகள்.சாப்பாட்டை விட்டு
பாதியில் எழுந்தவனை பின்தொடர்ந்தது
ஓடி வருகிறாள் யாரிடமும்
நடிக்க வேண்டிய அவசியமில்லாத
கிராமத்து தாய்... அவளிடமும்
சொல்ல மனமில்லாமல்
தவிக்கிறேன் அப்பனை போலத்தான்
நானும்... அப்பா நீயே என் உயிர்
No comments:
Post a Comment