பஸ் நிலையத்தில் தடுமாறி விழுந்த பாட்டியை தனியொருவனாக தாங்கிப் பிடத்தான்.. ஏன்ப்பா உனக்கும் யாருமே இல்லையா என்ற பாட்டியின் வரி சம்மடியாக மனதில் இறங்கியது.. எனக்கு அம்மா அப்பா எல்லாம் இருக்காங்க..
அப்படி இருந்து அவங்களால உன்னை புரிஞ்சுக்க முடியலை அப்படித்தானே.
மீண்டும் வார்த்தையால் அடித்தாள் உடலில் சற்றும் வலுவில்லாதவள்.
மெளனமே பதிலானது.
எனக்கு தெரியும் தம்பி.. வீட்டுல உன்னை நல்லா புரிஞ்சு இருந்தா நீ எனக்கு உதவியே இருக்க மாட்டே..
அடுத்தவங்க வலியை உணரும் மனிதனுக்கு மனதில் ஆயிரம் வலி இருக்கும்
தத்துவம் வெறுத்தது சரி பாட்டி நான் வருகிறேன்
No comments:
Post a Comment