எனக்குன்னு யாருமே இல்லை...ஏதோ நானும் வாழ்கையில் பிடிப்பே இல்லாம தான் வாழுறேன்.. இந்த நிமிஷமே நான் செத்தா கூட எனக்காக யாருமே அழமாட்டாங்க .என் பொண்டாட்டி புள்ள கூட என்னை ஓர் பொருட்டா மதிக்கிறது இல்லை.
அவங்க தலை மயிருக்கு குடுக்கிற மரியாதை கூட என்னோட வீட்டுல எனக்ஙு இல்லை என்றே கல்யாண வீட்டு வாசலில் கண்ணீர் மல்க பேசிய அந்த பெரியவர்
அட விடுப்பா,...எல்லோரும் வாழ்க்கையிலும் இப்படி ஓர் கட்டம் வரத்தான் செய்யும்.
கடவுள் உன்மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ரொம்ப பாசமான ஓர் உறவை சீக்கிரமா காட்டுவார்.
அதுக்கு அப்புறம் உன் வாழ்க்கையே அவங்க மட்டும் தான் என்று நீ வாழுவே.. அவங்களும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க
குழந்தை தனக்கு பிடித்தவர்களிடம் தனது ஆசையை சொல்லும். அதை அவர்கள் கேலியும் கிண்டலும் செய்தால்.
பிறகு அது தன் ஆசைகளை யாரிடமும் சொல்லாது.
அப்படி யாரிடமும் தனது உள்ளகிடங்கை சொல்ல இயலாத குழந்தைகள்.
வருங்காலத்தில் முரட்டு சுபாவத்துடன் கோபக்காரனா தான் வளர்கிறார்கள்.
உண்மையே பேச வேண்டும் என்று சொல்லி தாய் தந்தை கொடுத்த விஷயத்தை கடைபிடிக்கும் மனிதர்கள் பலர்.
ஆனால் அவர்கள் ஏமாற்றப்படும் போது.
விலகிச் சொல்கின்றனர்.
அதன் பின்னர் எத்தனை நல்லவர்கள் கிடைத்தாலும் பட்ட அடியும் வேதனையும் யாரிடமும் சொல்வதும் இல்லை.
எந்த ஓர் மனிதனை நம்புவதும் இல்லை.
சில நாட்களுக்கு பிறகு பார்த்த தன் சித்தி அத்தை/தாத்தா/ பெரியப்பா என்று யாரோ எனக்கு உன்னை தேடுச்சு என்று கல்யாண வீட்டில் சுற்றி இருக்கும் கூட்டத்தை பற்றி கவலை படாமல் மனதில் இருந்ததை வெளிபடையாக பேசியது குழந்தை.
பத்து நிமிஷத்து முன்னால் எனக்கு யாருமே இல்லை என்று பேசிய அந்த பெரியவர்..
வயிறு நிறைய மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு, நேரம் போகாமல் போலியாக பக்கத்தில் இருந்த சொந்தம் நட்புடன் தன்னை மிகவும் உண்மையானவர் நான் ஓருவரே என்பது போல் பேசி அமர்ந்திருந்த கூட்டத்தை ஏளனமாக சிரித்த படி கூப்பிட்டார்..
மச்சான் இங்கே வாங்க.. மாப்பிள்ளை இங்கே வாங்க..சித்தி..மதினி எல்லோரும் வாங்க.. அரசியல் மாநாட்டிற்கு கூட்டம் சேர்ப்பது போல் கூட்டினார்..
அனைவரின் முன்னரும் குழந்தை நீ என்கிட்ட சொன்னதை திரும்ப சொல்லு..அந்த கள்ளமில்லா குழந்தை. வெளந்தியாக சொன்னது எனக்கு உன்னை ரொம்பவே தேடுச்சு உன்னை நினைச்சு நான் அழுதேன் தெரியுமா..
அதுவரையில் போலியாகவே வாழந்து பழகிய கூட்டம் அத்தனையும் வாயடைத்து விக்கித்து போனது.
அதில் இருந்த காலேஜ் படிக்கும் ஓருத்தி மாமா எனக்கு கேட்கலை இன்னொரு தடவை சொல்ல சொல்லுங்க என்றாள்
ஏன்டீ, குழந்தை எவ்வளவு அழகா மழலை மாறாம சொல்லுது அதை ஏன்டீ துன்பபடுத்துற...
பாட்டி அவளுக்கு அவ லவ்வர் நினைவு வந்திருச்சு அதான் திரும்ப சொல்ல சொல்லுறா.. அவளின் முகத்தில் வெட்கம் படர்ந்தது..ஏலே நீ சும்மா கிட தன் தம்பியை அடக்கினாள்..
அந்த பெரியவரின் முகத்தில் பெருமிதம் தென்பட்டது.குழந்தை நீ இன்னொரு தடவை சொல்லு.
சுதுவாது தெரியாத அந்த குழந்தை மீண்டும் சொன்னது..
கல்யாண மண்டபமே கத்தி கூச்சலிட்டனர்.. ஏய் இந்த வயசுலையே என்ன தைரியமா மனசுல இருக்கிறதை பேசுறான் பாருங்க..
மணமக்கள் இருவரையும் அழைத்து வரச் சொல்லி பேசினாள் பாட்டி..
உங்க பாட்டி உங்க இரண்டு பேரையும் கூட்டிகிட்டு வர சொன்னாங்க..
ஏன் ஏதாவது விஷயமா கேட்ட மாப்பிள்ளை.
நீங்க ஓண்ணு எங்க பாட்டிக்கு இதே வேலையா போச்சு.. யாரையும் நிம்மதியா சிரிக்கவே விடாது.. இன்னிக்கு நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல
ஏதாவது பேசி சண்டை இழுக்கும் இதே ரோதனை தான்.
எதுக்கு இந்த மாதிரி கிழடு கட்டையெல்லாம் இனி நமக்கு மணமகன் சொல்லவும் பின்தொடர்ந்தாள்.
என் கல்யாணம் ஆகுறதுக்காக தான் அப்பா பொறுமையா இருந்தாரூ..அதை அடுத்த வாரம் முதியோர் இல்லத்தில் போய் சேர்க்க போறோம்.
அவங்களுக்கு இது தெரியுமா.
தெரிஞ்சா தானே.. கல்யாணத்துக்கு சாப்பாடு போடுற மாதிரி போய் அவங்களை அங்கே விட்டு வர வேண்டியது தானே.
ஓர் வேளை அந்த நேரத்தில் சண்டை போட்டா அதுக்கு தானே 2 லட்சம் டொனேஷன் கொடுக்கிறோமே..
அங்க உள்ளவங்க, இது அழுதா நம்ம கண்ணு முன்னாடியே இரண்டு அறை அறைச்சுடுவாங்க..
அட இது பாவம் இல்லையா.
என்னங்க நீ பாவம் புண்ணியம் பார்த்தா இந்த கிழவி நம்ம கூட ஹனிமூன் வரும் என்பா அதுக்கு நீ சம்மதிப்பீங்களா..
மணமகனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
ஏன்டீ உமா சீக்கிரமா வாடீ...கிழவி மணமகளை கூப்பிட்டால் அதற்குள் அந்த குழந்தை பத்தாவது முறை சொல்லி இருந்தது.
மணமகனும் மணமகளும் வந்தவுடன்.. பாட்டி கம்பீரமாக சொன்னாள்.
யோவ் பெரியவரே இன்னொரு தடவை சொல்ல சொல்லுங்க..
இந்த முறை குழந்தை சண்டித்தனம் செய்தது.. எல்லோரும் தன்னை வைத்து விளையாடுகிறார்கள் என்று புரிந்து நான் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது.
ஏலே சொல்ல போறீயா. உன் முதுகு தோலை உரிக்கவா அப்பா தன் அதிகாரத்தை அங்கே நிலை நாட்டினார்..
அது வரை அமைதியாக இருந்த குழந்தை.. கண்கலங்கி கண்ணீர் விட்டு அழுதது..
இதுவரை சிரித்த படி இருந்த அனைவரின் மனதிலும் சோகம் கொண்டது..
எதுக்கு குழந்தையை திட்டுறீங்க.. எல்லோரும் குழந்தையின் தகப்பனை வசை பாடினர்.குழந்கனதை எப்படி கள்ளமில்லாம பேசுது.
எல்லா அவ ஆத்தா வழி ஆளுங்க மாதிரி மனசுல உள்ளதை எல்லாம் பேசி நம்ம உசிரை வாங்குது..
ஓர் நாளாவது நிம்மதியா வாழு விடுவாங்களா.. வீட்டின் சண்டை கல்யாண மண்டபத்தில் ஒலித்தது.
கூட்டத்தின் நடுவே அழுக்கு புடவையில் ஏதோ வேலைக்காரி போல் இருந்தவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.
அப்போது மண்டபத்தின் நடுநாயகமாக இருந்தவன். ஓடிச்சென்று அந்த பெண்மணியை கட்டிப்பிடித்தான்.
அம்மா நீ அழாதே அம்மா..நீ அழுதா நானும் அழுவேன்..ப்ளீஸ் அம்மா..எனக்காக நீ அழாதே.
அவளின் கண்ணிலோ மேலும் கண்ணீர் பெருகியது. சிறு வயதில் அப்பனை இழந்து மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் மதிப்பெண் எடுத்து என்ன பிரயோஜனம்.
தனக்கு பிறகு பிறந்த தம்பி அம்மா ஓர் நாள் திட்டியதால் கோபித்து கொண்டு கல்யாணமாகி போன அக்கா வீட்டுக்கு சென்றான்..
எந்த படிப்பும் படிக்காமல் ஊர் சுற்றி எல்லா கெட்ட பழக்கமும் உண்டானது..
விதி வலியது அல்லவா..அவனை நல்லவன் என்று நம்பி ஓர் குடும்பத்தில் பெண் கொடுக்க முன்வந்தனர்.
ஆனால் அவர்கள் சொன்ன விஷயம் உங்க அக்காவை சீக்கிரமா வீட்டை விட்டு நகட்டு பிறகு தான் என் பொண்ணை கொடுப்பேன் என்றனர்.
அவசர கதியில் ஓரே வாரத்தில் நாளையோ இன்றோ செத்து விடும் நிலையில் இருந்த ஓர் குடிகாரனுக்கு அவளை கட்டி வைத்தனர்.அதை நினைத்து நினைத்து அவள் தினமும் அழுதாள்..
அம்மா ப்ளீஸ்மா... அவளின் கண்ணீரை தன் பிஞ்சு கைகளால் துடைத்த படி பேசினான் அந்த நாலு வயது கூட நிரம்பாத மழலை
நான் நல்லா படிச்சு பெரியவனா ஆகி அம்மா, பெரியம்மா... அப்பா உங்க எல்லாரையும் நல்லா பெரிய பங்களாவுல வாழ வைப்பேன்.
அதுவரை கோபமான முகத்தில் இருந்த அப்பா.. ஏனோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.
கல்யாண மண்டபமே அடுத்து அடுத்து நிகழ்ந்த உணர்ச்சி மிகுந்த காட்சியை கண்டு அமைதியாக இருந்தனர்.
ஓவ்வொரின் மனதிலும் ச்சே இந்த வீட்டுல நாம பிறந்திருந்தா எப்படி இருக்கும் என்று கற்பனையில் மிதந்தனர்.
கோபத்தை குறைத்து, தன் பாசத்தை வார்த்தையில் காட்டினார் அப்பா.
மெலிதான குரலில் டேய் நீ இன்னொரு தடவை அதை சொல்லி காட்டு..
மண்டபத்தில் யாருமே இல்லை என்பது போல் குழந்தை அப்பாவை நோக்கி...கட்டளை போல் பேசியது
நீ அம்மாவ அடிக்கடி திட்ட மாட்டேன்னு பிராமிஸ் பண்ணு. அப்போ தான் சொல்லுவேன்.
தன் கெளரவத்தை குழந்தையின் மழலை குலைப்பதாஇ எண்ணி பக்கத்தில் நின்றவரின் கையில் இருந்த மர விசிறியை வாங்கி குழந்தைய தாறுமாறாக அடித்தார்
அம்மா ஓடி வந்து குழந்தையை வாரியணைத்து எதுக்கு இப்போ புள்ளைய போட்டு அடிக்கிறீங்க என்றாள்.
இப்படி செல்லம் கொடுந்து தான்டீ இவன் இப்படி வளர்கிறான்..
மண்டபத்தில் மமான அமைதி நிலவியது..
அப்போது மனோகரா வசனம் அங்கே இருந்த தொலைக்காட்சி பெட்டியில் ஓடியது..
இது எங்களின் குடும்ப விஷயம் இதில யாரும் தலையிட வேண்டாம்.
இது குடும்ப லிஷயமென்றால் கொலு மண்டபத்திற்கு வருவானேன்..
தான் ஓர் சிவாஜி ரசிகர் என்பதையும் மறந்து அவர் கத்தினார்.ஏலே .யாருலே அங்கே.. அந்த டி.லி நிறுத்த போறீயா இல்லாட்டியும் தூக்கிப் போட்டு உடைக்கவா..
டி.லியும் அமைதியது.. அப்போது எல்லோரின் மனதிலும் ஓர் கேள்வி ஓடியது இவ்வளவு கோபக்ஙாரனை எப்படித்தான் சமாளிக்கிறாளோ...
அந்த உணர்ச்சிவசமான தருணத்தை குழந்தையின் தாய் மாற்ற நினைத்தாள்..
டேய் செல்லம் நீ இன்னும் ஓரே ஓர் தடவை அதை திரும்ப சொல்லுடா...
குழந்தை அப்பாவின் முகத்தை பார்ததது.எதுக்குடா என் மூஞ்சிய பார்க்குறே..
அப்பா நீ கொஞ்சம் சிரி அப்போ தான் நான் பேசுவேன்..இத்தனை அடியும் ஏச்சுக்களும் வாங்கிய பிறகும் அந்த குழந்தை தன் தகப்பனை சிரிக்க சொன்னூஉ ஏனோ அனைவர் மனதையும் நெகிழ வைத்தது..
அது வரைக்கும் பெரியவரை நோக்கி பேசிய குழந்தை இந்த முறை தன் தகப்பனை நோக்கி பேசியது..
எந்த பெரியவரை நோக்கி உணர்ச்சி பூர்வமாக சொன்ன வார்த்தைகள் இப்போது சொல்லும் போது உணர்ச்சியற்ற நிலையில் இருந்தது..
மீண்டும் மண்டபமே அதிர கல்யாண கூட்டம் சிரித்தது.ஆனால் இந்த தடவை அனைவரும் போலியாக சிரித்தனர் என்பதை அவர்களின் மனசாட்சி சொல்லிற்று..
தகப்பன் மெதுவாக நடத்து மண்டபத்தின் வாசல் அருகே சென்றார்..சில நிமிடங்களுக்கு மீண்டும் அபைதி நிலவியது.
தனக்கு யாருமே இல்லை என்று வாசலில் அழுத பெரியவர் அந்த குழந்தையின் கையை பிடித்தார்..
அப்போது மீண்டும் மண்டபமே அதிர ஓர் சத்தம் கேட்டது.. ஆம் அது வரைக்கும் மலையில் அனைவரையும் மகிழ வைத்த குழந்தை கத்தியது
நீ என்னைய தொட்ட உன் உச்சி மண்டைய பிளந்துடுவேன்..
வேகமாக ஓடிச்சென்று மணவறையில் இருந்த தேங்காயை எடுத்து வந்து மிரட்டியது..
இப்படி ஓர் குழந்தை நமக்கு இல்லையே என்று வருந்தியவர்களின் மனதிலும் கூட அச்சம் மேலோங்கியது..
அங்கே யூனிபார்ம்ல இருந்த போலீஸ் ஏட்டு.. மிரட்டும் தொனியில் டேய் தம்பி கீழே போட்டுறு இல்லைன்னா ஜெயில்ல பிடிச்சு போட்டுறுவேன் என்றார்.
அப்போது மீண்டும் குழந்தை மழலை மொழியில் அவரை மிரட்டியது.யோவ் நீ தூர போயிரு நீ யாருன்னே எனக்கு தெரியாது.. பிறகு உன்னோட மண்டைய தான் முதல்ல பொழைப்பேன்..
டேய் அவரூ போலீஸ்டா..யாரோ கூட்டத்தின் மறைவில் இருந்து பேசினார்..
யாரா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா பேசுடா பொட்டை பயலே .. டேய் எங்க அப்பா எவ்வளவு பெரிய ஆளுன்னு உனக்கு தெரியுமா.
அதுவரை பக்கத்தில் இருந்த பெரியவர்..வாய் திறந்து பேசினார்..என்னை மன்னிச்சுடுப்பா.. நான் தான் ஏதோ தப்பு பண்ணிட்டேன்...
அடுத்த நொடி குழந்தை அதிகார தோரணையில் பேசியது..ஏலே ஏதோ உன்னை தேடுச்சுன்னா சொன்ன என்னை வைச்சு சிரிக்கவா செய்யுற..இனி எங்க வீட்டு பக்கமே வரக்ஙூடாது...
பெரிய ரெளடி போல் பேசியது குழந்தை.அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி இருந்த ஒருத்தி சொன்னாள்
ஏலே செவுட்ட பேத்துருவேன் தேங்காய கீழே போடுலே...கூட்டமே பயந்த படி நின்றது இதற்கு என்ன பதிலடி தருவானோ என்று பயந்தபடி நின்றது.
போலீஸ் கார் கூட தன் முகத்தில் வந்த வியர்வையை துடைத்தார்.
ஆனால் அந்த சிறவனோ தேங்காயை மீண்டும் அந்த தாம்பாளத்தில் வைத்து விட்டு மீண்டும் குழந்தை போல் ஓடிச்சென்று அவளின் காலை கட்டிக்கொண்டு சொன்னான்..
சச்சம்மா.., நீ அடிக்கடி சொல்லுற மாதிரி எடுத்த பொருளை எடுத்த இடத்துலையே வைச்சுட்டேன் பார்த்தீயா..
நீ நம்ம வீட்டு செல்ல கன்னுக்குட்டி, பாச மழையில் இருவரும் நனைவதை அவளின் அம்மா அங்கீகரிப்பது போல் மெளனமாக சிரித்தாள்
ஏவே உங்க அப்பா எங்கேயோ போறாரூ நீ போய் அவரை கூப்பிடு.. சர்க்கஸ் மிருகம் சொல்லுவதை கேட்பது போல் அவனும் அதை செய்தான்..
இப்போது அனைவரும் மெளனமாக இருந்தனர்.
ஓடிச்சென்ற குழந்தை அப்பாவின் கைய பிடித்து இழுத்தது.அத்தோடு மேலும் சொன்னது.
அப்பா, சண்டை முடிச்சு போச்சு நீ வாப்பா நாம சாப்பிட போகலாம்..
வாசலில் ஐஸ்கிரீம் விற்ற படி போனவன் குழந்தை நிற்பதை பார்த்தவுடன் ஐஸ் ஐஸ் என்ற கத்தினான்..
கூட்டமே மிரண்டது இந்த ஐஸ்காரன் என்ன பாடு பட போறோனோ...
உனக்கு ஐஸ் வேணுமாடா...
எனக்கு வேண்டாம்பா உன்கிட்ட காசு கம்மியா இருக்குன்னு நேத்து சொன்னீயே .
அந்த கூட்டத்தில் இருந்த ஓர் இளவயதுகாரி. மிகுந்த சிரமத்துடன் தைரியத்நை வளர்த்நு கொண்டு அந்த சிறுவனை நோக்கி கேட்டாள்.
தம்பீ இவ்வளவு பாசக்காரனாவும் கோபக்காரனாவும் இருக்கீயே உன் பெயர் என்னப்பா..
அவனோ அப்பாவின் முகத்தை நோக்கினான்.. கோபக்ஙாரனாக இருந்த அப்பா பாசக்காரனாக பேசினார்.
அப்பா நான் சொல்லுற மாதிரி சொல்லவா அல்லது நீ சொல்லுற மாதிரி சொல்லவா..
மீண்டும் உணர்ச்சியின் வேகத்தை அனைவரின் மனதிலும் கடத்தி ஸ்தம்பிக்க வைத்தான் அந்த சிறுவன்.
நீ ஸ்கூல்ல டீச்சர்கிட்ட சொல்லுற மாதிரி சொல்லு..
நீ என்ன லூசாப்பா.இது ஸ்கூல் இல்ல கல்யாண மண்டபம்.
எதிர்த்து பேசுவதால் மீண்டும் அடி வாங்க போகிறான் என்று எதிர்பார்த்த கூட்த்திறக்கு அதிர்ச்சியே பதிலாக கிடைத்தது.
அவனின் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னார் உன் இஷ்ட படியே சொல்லுடா...
ம்ம் என்று தலையாட்டி யவன தன் பெரியம்மாவை நோக்கி ஓடிச்சென்ற அவளை கட்டி பிடித்து கொண்டு மண்டபம் அதிர பேசினான்.
பெரியம்மா சொல்லுற மாதிரி தான் சொல்லுவேன்..
அனைவரின் முகத்திலும் மீண்டும் ஆச்சரியம் பரவியது..
அவன் உரக்கவே சொன்னான்.
அச்சமும் அச்சப்படும் ராம் என்னருகில் எனக்கு எதை கண்டும் பயமில்லையே.. என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்..அப்பா எனக்கு தந்தது நாள் உனக்கு தந்திட்டேன்.வெடிச் சிரிப்பு சிரித்தாள்..
சுற்றி இருந்த அனைவரின் உதடுகளும் முணுமுணத்தது.
அச்சமும் அச்சப்படும் ராம் என்னருகில்.
வயதானவளின் கையை பிடித்த படி இந்த சிறுவனின் முகச்சாயலில் வந்தான்.
கூட்டத்திற்கு மேலும் வியப்பு கூடியது இரட்டை பசங்களா இவங்கநோ
தோரையாக அவனை நோக்கி சென்று அவனின் தோளை இறுக்கி பிடித்து சொன்னான் இவன் என்னோட தம்பி லட்சுமணன்
கூட்டமே பக்தி பரவசத்தில் இருப்பது போல் மீண்டும் முணுமுணத்தது
அச்சமும் அச்சப்படும் ராம் என்னருகில்
.
No comments:
Post a Comment