வணக்கம் நண்பர்களே,
இதுவரையில் நீங்கள் எனது எழுத்துகளுக்கு வழங்கிய அன்பும் ஆதரவும் மிகவும் சிறப்பானது.
சிறந்த கதை மற்றும் பல உண்மைகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே
முகவர் முகுந்தன்*
வருடம் முழுவதும் வெயில் மழை என்று பாராமல் தன்னை சந்திக்கும் ஓவ்வொரு மனிதரிடமும் இன்சூரன்ஸ் என்பதை பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசி புரிய வைத்து பாலிசி எடுக்க வேண்டி, எல்லா தரவுகளையும் அவர் வாங்கி வருகிறார்.
அதை தன் மனைவி பெயரில் எடுத்து வைத்திருக்கும் ஏஜெண்ட் Code -மூலமாக எப்படி பாலிசி எடுக்க வைக்கிறார் என்பது பற்றியும்.
உழைக்கும் இன்சூரன்ஸ் முகவர்களை உற்சாக படுத்த கம்பெனி தரும் சிறு சிறு ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்களை எப்படி அவர் திருடி தன் சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறார் என்பது பற்றியும் இன்னும் பல சுவாரஸ்யமான உண்மை தகவலுடன் எழுதப்படும் ஓர் புதினம்.
இன்சூரன்ஸ் துறையில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் இந்த கதை சமர்ப்பணம்.
Some sorry Tit-Bits as follows
என்னப்பா வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சு நீ இன்னும் ஓர் பாலிசி கூட பிடிக்கலையே.இப்படியே போனா என்ன செய்யுறது.. நீ என்ன செய்வீயோ தெரியாது.இன்னிக்கு சாயங்காலத்துக்கள்ள எனக்கு ஓர் லட்சம் பாலிசி செக் வேண்டும்
சார் அது வந்து, நேத்து கூட ஓருத்தரை போய் பார்த்து பேசிட்டு தான் வந்திருக்கேன்.அவர் அடுத்த வாரம் 50,000 பண்ணுறதா சொல்லி இருக்கார்.
தனக்கு எதிராக அதுவும் புதிதாக வேலைக்கு சேர்ந்த முத்துகுமார் பேசுவதை நல்லசிவம் பொறுக்க இயலாமல் தவித்தார். பெயரில் மட்டும் தான் நல்லது இருந்ததே தவிர உடலும் மனமும் முழுவதும் விஷம் என்பதை அவருடன் பழகியவரால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தன்னை ஓவ்வொரு செயலிலும் நல்லவனை போவவே காட்டிக்கொண்டு இருந்தார் நல்லசிவம்
அலுவலகத்தில் இருந்த பிறர் நல்ல வேளை நம்மளை கேள்வி கேட்கலை என்ற நிம்மதியில் இருந்தனர்.
அந்த சமயத்தில் நல்லசிவம் செய்த மறைமுக சமிக்கையை துல்லியமாக கணித்தது பழனி ஓருவரே.
பிறகு இருக்காதா, எட்டு வருஷமா எந்த பாலிசியுமே பண்ணாம அடுத்தவன் எடுத்து வந்த பாலிசியை நல்லசிவம் உதவியுடன் தன் மனைவி பெயரில் இருக்கும் டம்மி Code -மூலமாக பாலிசி செய்வதே அவரின் வேலை.
அதில் வரும் கமிஷனை மிக துல்லியமாக பிரித்து கொண்டு அலுவலகத்தில் செயல்பட்டனர் இந்த இருவரும்.
சரி கதைக்கு வருவோம்...
பேச்சி லலிதா ஐயப்பன் சுந்தர் அனைவரும் அமைதியாக இருக்கும் போது சீறிப் பேசியது பழனி ஓருவரே.பிறகு வாங்குறே காசு இந்த ஓர் வேலை தானே பார்க்கிறார் ..
ஏதோ மாதம் தோறும் 5 பாலிசி கொடுப்பது போலவும், அலுவலகத்தின் சிறந்தவர் போல் காட்டிக் கொள்ளும் பழனி பேசினார்.
என்னப்பா முத்து நான் இந்த கம்பெனியில் 8 வருஷமா வேலை செய்யுறேன்.
இதுவரை ஓர் தடவை கூட நம்ம மேனேஜரை எதிர்த்து பேசியதில்லை.நீ என்னப்பா இரண்டு மாசத்துல அவரையே எதிர்த்து பேசுற அளவுக்கு வளர்த்துட்டீயா...
மேடம் பேச்சியம்மா, லலிதா நீங்க கூட சும்மா உட்கார்ந்து இருக்கீங்க..
புதுசா வந்த பையன் இப்படி பேசுறான் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க..
முத்து பதறியே போனான்..பேச்சி..லலிதா இருவரும் கூட மிரண்டு தான் போயினர்.
ம்ம்ம் சரியாக சொன்ன வேலையை செய்து வீட்டீர் என்பது போல் மேனேஜர் நல்ல சிவம்
...
இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க ஓர் முகவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்..
கஷ்டப்பட்டு தரும் தகவலை பிற கம்பெனிகளுக்கு *ஓர் போன் நம்பர் 100 ரூ*
விற்பனை செய்து இன்னொரு சம்பாதிக்கிறார்.. நிறுவனத்திற்காக நேர்மையாக உழைக்கும் ஓர் குழு மேனேஜர்..
எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அவனை வேலை செய்ய விடாமல் இன்னொரு குழு தலைவர்.
மனைவியின் பெயர் டம்மி I.D மூலமாக
எந்த வேலையும் செய்யாமல் என்ற பெயரில் என்பதே கதை களம்.
நேர்மையாகவும் உண்மையாகவும் உழைக்கும் இன்சூரன்ஸ் முகவர்
தேவையை உண்மையை அம்பலப்படுத்தும் கதை தான் *முகவர் முகுந்தன்*
No comments:
Post a Comment