இவர் குரு யார் தெரியுமா?

சனாதன தர்மத்தின் வேர்களில் மிகவும் முக்கியமானவர்கள் பெயர் இப்படித்தான் அழைக்கப்படும்..

இவர் குரு யார் தெரியுமா??
எப்போது மனதில் எழும் திமிர் அதிகம். தனது தந்தையின் பெயரை உயர்வாக சொன்னால் வரும் பெருமித்தை விட இது சற்றே கூடுதல் தான்..

குரு க்ருபா.. இந்த ஓன்றை மட்டும் வாழ்வில் அடைய வேண்டி தவம் கிடப்பவர்கள்
எத்தனையோர்..

ஒவ்வொருவருக்கும் அவருக்கு ஏற்பவே குரு அமைகிறார்...

இந்திய கலாச்சாரத்தில் குரு என்பது பரம்பரை என்பதை விட மேலான ஓர் உன்னத உணர்வு சார்ந்த உளவியல்.

குருமார்களுக்கும் சிஷ்யர்களுக்குமான உறவு, தந்தையின் பாசமும் தாயின் கண்டிப்பு கொண்ட நண்பனை போன்றது..

சிலர் தன் வாழ்நாள் முழுவதும் அவரின் அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள்.

குரு என்பவர் தன் சிஷயனிடம், பத்து ஏக்கர் நன்செய் இரண்டு லட்சம் பணம் என்ற கேட்பதில்லை.
மாறாக தான் அறிந்த ஆன்மீக சில விஷயங்களையும் அனுபவத்தையும் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் சொல்லிக்கொடுக்கும் கண் கண்ட தெய்வம்...

ஓர் இனிப்பின் சுவையை இனிப்பாக இருந்தது என்று சொல்ல முடியும்..
அந்த ருசியை உணர்த்த சாதாரண மனிதனால் முடியாதது..
ஆனால் இறை நிலையை குருவின் அருள் இருந்தால் உணரலாம்...

இந்த பயணம் எல்லோருக்கும் கிடைப்பது அரிது..
முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கும் குருவின் அருள் கிடைக்கலாம்...

இது பணம் சம்பாதிக்கும் வழியல்ல, மனதில் அமைதி தேடும் முயற்சி....

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...