கோவில்
வாசலில்
பிச்சை எடுக்கும்
பலர் - அதிலும் கூட
வித்தியாசம் ஓருவர்
சாப்பாடுக்கு பணம்
கிடைத்தால் போதும்
எழுந்து போய் விடுவார்....
அதுவும் கூட
நாளொன்றுக்கு
ஓரே வேளை
சாப்பாடு தான்....
பத்து ரூபாய்
அதிகம் வந்தால்
பக்கத்தில் இருப்பவரிடம்
கொடுப்பார் -- இல்லையென்றால்
அதிலும் கூட
வித்தியாசம் காட்டுவார்.....
அந்த பணத்தை
கோவில்
உண்டியிலில்
போட்டுவிடுவார்....
தினமும் பணம்
தேடி அலையும்
எனக்குள் மாற்றம்
தந்தவன் அந்த
பிச்சைகாரன் - அல்ல
பிச்சையெடுக்கும்
பிச்சைக்காரர்