காதலின் தொடக்கம் ...
இனிது... இனிது...
சும்மா இரு சுகம் என்பான்.
சும்மா இருந்தால் தான் மனம் செய்யும் பித்தலாட்டமும், போலியாய் சிரிக்கும் வேதனையும் தெரியும்....
பணம்,பதவி, பட்டம், புகழ் அனைத்தும் நிலை அல்ல பயண நேரம் தான்.... அத்தனையும்..
மாதா,பிதா, குரு, தெய்வம்..
அழகாக அடுக்கி வைத்தார்கள் முன்னோர்கள்..
உடல் செய்யும் ஜாலம்...
கண்கள் பார்க்கும்...
செவிகள் கேட்கும்....
இதயம் ஆசை படும்...
ஆனால் மனம் எங்கோ பறக்கும்....
எந்த வயதிலும் அற்ப சுகம் தேடும் மனம்..
நம்ம மனசுல தானே நினைக்கிறோம்...
யாரும் தெரியும் என்ற திமிர் வரும்....
கற்பனையில் ஜாலம் காட்டும்...இருப்பதை வெறுக்கும்...
இல்லாத ஓன்றை நினைத்து ஏங்கும்...
எதிரில் இருப்பவரிடம் உதட்டில் இனிக்க பேசி விட்டு, உள்ளம் குரங்கு போல் குதிக்கும்...
உலகத்தில் உள்ள ஆயிரம் பேரை சில மணி நேரம் வார்த்தை விளையாட்டில் கட்டிப்போடும் ஆளுமை வரும்...
ஆனால் தன் மனம் அடங்க மறுத்து சண்டித்தனம் செய்யும்..
ஊர் புகழும் திறமைசாலி என்று....
மனசாட்சி சொல்லும் நீ என் அடிமை என்று..
நிமிடத்திற்கு நிமிடம் புதிய எண்ணங்களை தந்து வேடிக்கை பார்த்து சிரிக்கும் மனம்.. ஆனால் அதில் செயல்படுத்தப் போவது சில மட்டுமே....
என் ஜாதி மதம் உயர்வு என்று எண்ணிக் கொண்டு சில நாள் திரியும்...
சிலரின் எதிர்பாராத மரணம்... எச்சரிக்கை மணியடிக்கும்....
இறந்தவன் வீடு கண்டால்...
ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி கட்டளையிடும்.. மரணத்தின் பயம் மனதை கவ்விக்கொள்ளும்..
பிறகு ஓர் முறை கூட தனது ஜாதி மதம் பற்றிய வீராப்பு பேச நினைக்காது....
எத்தனை சம்பாதித்தாலும் போகும் போது
கொண்டு செல்ல முடியாது உலகை விட்டு என்ற தெளிவில்லை.. இருக்கும் வரை ஏனோ சிலரிடம்...
பிறருக்கு உதவி செய்தல் தான் வாழ்க்கை என்பது புரிதலை மனம் சிலருக்கு தான் புரிய வைக்கிறது..
இதற்கு மனம் தந்த பெயர்...
இறைவனின் விளையாட்டு விதியின்
பெயரால்...
உண்மையாக வாழ்பவன் எளிமையாக வாழ்வை கடக்கிறான்...
போலியாக இருப்பவன் ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்துகிறான்..
ஆனால் அவனே நினைத்து பார்க்காத திருப்பம் வந்தால்...இறைவா என்று கூறுகிறான்..
அப்போதுதான்
மனம் பீதியில் உறையும்...
உலகை இயங்கும் அறிவியல் கண்டு பிரமிக்கும் மனம்....
மனம் செய்யும் விளையாட்டு உற்றுப்பாருங்கள்.
நீங்கள் நடத்தும் நாடகத்தை தூக்கி வீசுங்கள்... உங்களுக்காக வாழுங்கள்.புகழ்ச்சி தேடும் வாழ்க்கை ஏன்???
உங்களின் உண்மையான சுகம் தனிமை....
இனிது... இனிது
ஏகாந்தம் இனிது..
ஆதியை தொழுதல்
அதனினும் இனிது..
இறைவனை தொழுதல் இனிது.... இனிது.
- வள்ளிசங்கர்....
பிடித்தால் பகிருங்கள்..
https:://anmaai.blogspot.com
இனிது... இனிது...
சும்மா இரு சுகம் என்பான்.
சும்மா இருந்தால் தான் மனம் செய்யும் பித்தலாட்டமும், போலியாய் சிரிக்கும் வேதனையும் தெரியும்....
பணம்,பதவி, பட்டம், புகழ் அனைத்தும் நிலை அல்ல பயண நேரம் தான்.... அத்தனையும்..
மாதா,பிதா, குரு, தெய்வம்..
அழகாக அடுக்கி வைத்தார்கள் முன்னோர்கள்..
உடல் செய்யும் ஜாலம்...
கண்கள் பார்க்கும்...
செவிகள் கேட்கும்....
இதயம் ஆசை படும்...
ஆனால் மனம் எங்கோ பறக்கும்....
எந்த வயதிலும் அற்ப சுகம் தேடும் மனம்..
நம்ம மனசுல தானே நினைக்கிறோம்...
யாரும் தெரியும் என்ற திமிர் வரும்....
கற்பனையில் ஜாலம் காட்டும்...இருப்பதை வெறுக்கும்...
இல்லாத ஓன்றை நினைத்து ஏங்கும்...
எதிரில் இருப்பவரிடம் உதட்டில் இனிக்க பேசி விட்டு, உள்ளம் குரங்கு போல் குதிக்கும்...
உலகத்தில் உள்ள ஆயிரம் பேரை சில மணி நேரம் வார்த்தை விளையாட்டில் கட்டிப்போடும் ஆளுமை வரும்...
ஆனால் தன் மனம் அடங்க மறுத்து சண்டித்தனம் செய்யும்..
ஊர் புகழும் திறமைசாலி என்று....
மனசாட்சி சொல்லும் நீ என் அடிமை என்று..
நிமிடத்திற்கு நிமிடம் புதிய எண்ணங்களை தந்து வேடிக்கை பார்த்து சிரிக்கும் மனம்.. ஆனால் அதில் செயல்படுத்தப் போவது சில மட்டுமே....
என் ஜாதி மதம் உயர்வு என்று எண்ணிக் கொண்டு சில நாள் திரியும்...
சிலரின் எதிர்பாராத மரணம்... எச்சரிக்கை மணியடிக்கும்....
இறந்தவன் வீடு கண்டால்...
ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி கட்டளையிடும்.. மரணத்தின் பயம் மனதை கவ்விக்கொள்ளும்..
பிறகு ஓர் முறை கூட தனது ஜாதி மதம் பற்றிய வீராப்பு பேச நினைக்காது....
எத்தனை சம்பாதித்தாலும் போகும் போது
கொண்டு செல்ல முடியாது உலகை விட்டு என்ற தெளிவில்லை.. இருக்கும் வரை ஏனோ சிலரிடம்...
பிறருக்கு உதவி செய்தல் தான் வாழ்க்கை என்பது புரிதலை மனம் சிலருக்கு தான் புரிய வைக்கிறது..
இதற்கு மனம் தந்த பெயர்...
இறைவனின் விளையாட்டு விதியின்
பெயரால்...
உண்மையாக வாழ்பவன் எளிமையாக வாழ்வை கடக்கிறான்...
போலியாக இருப்பவன் ஒவ்வொரு நாளும் நாடகத்தை நடத்துகிறான்..
ஆனால் அவனே நினைத்து பார்க்காத திருப்பம் வந்தால்...இறைவா என்று கூறுகிறான்..
அப்போதுதான்
மனம் பீதியில் உறையும்...
உலகை இயங்கும் அறிவியல் கண்டு பிரமிக்கும் மனம்....
மனம் செய்யும் விளையாட்டு உற்றுப்பாருங்கள்.
நீங்கள் நடத்தும் நாடகத்தை தூக்கி வீசுங்கள்... உங்களுக்காக வாழுங்கள்.புகழ்ச்சி தேடும் வாழ்க்கை ஏன்???
உங்களின் உண்மையான சுகம் தனிமை....
இனிது... இனிது
ஏகாந்தம் இனிது..
ஆதியை தொழுதல்
அதனினும் இனிது..
இறைவனை தொழுதல் இனிது.... இனிது.
- வள்ளிசங்கர்....
பிடித்தால் பகிருங்கள்..
https:://anmaai.blogspot.com