வெள்ளியங்கிரி



கிராமத்தில்
பாம்பு பிடித்து
விளையாடிய அந்த
சிறுவனின் அருகே வந்து
செல்லமாக கேட்டார் கிழவர்
தம்பி பெரிய பாம்பு
காட்டுறேன் என் கூட
மலைக்கு வர்றீயா....
நிஜமாவே பெரிசா.....
ஆமாம்.... ஆனா...
சாதாரண கண்ணுக்கு
தெரியாது.....
சிறுவனுக்கு. பேராசை
அதிகம்.... வீட்டில்
சொல்லி விட்டு வாடா
தம்பி.‌......
அப்படி இருந்தால்...
நான் ஏன் பாம்பு
பிடிக்கிறேன்....
பள்ளி கூடம்
போக கூட காசில்லை
தழுப்பிய கண்ணீரை
துடைத்து விட்டார்..
நீ ஆளப்பிறந்தவன்
அழக்கூடாது...
வெள்ளை தாடியை
தடவியபடி அவனை
அழைத்து ஆவிசேர்த்து
கட்டிக்கொண்டு......
எதுக்கும் கலங்காதே...
நான்  இனி
உனக்கு எல்லாம்
செய்து தாறேன்...
சரியா... தலையாட்டினான்....
கிழவனின்
பச்சை நிற கண்கள்
பளீரிட்டன.......
பாசக்காரன்டா நீ...
இனி உனக்கு
பெரிய குடும்பபொறுப்பு
காத்திருக்கு....
உன்னை நினைச்சு தான்
உன் பொண்டாட்டி
உருகுறா...
ஏதும் புரியாமல்
சின்னஞ்சிறு பாலகன்....
அவருக்கு பின்னே
நடந்து சென்றான்
இருவரும்
சென்ற இடம்
வெள்ளியங்கிரி...
பிடித்த கொடுத்த
பாம்பின்
பெயர்
குண்டலினி...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...