எழுத்துக்கள் மறைவதில்லை...



ஆசையின்
வெளிப்பாடு
மட்டுமல்ல
கவிதை- அவை
எப்படி வாழந்திட
தனிமனித
பிரயத்தனம் என்பதே
கவிதை மற்றும்
கதையின் தொடக்கம்..
வாழ்க்கை தேடி
அவர் அவர்களின்
பயணங்கள்- செல்லும்
திசைகள்
மாறுபடும்
எல்லா நேரமும்...
ஆயிரம் விமர்சனம்
ஆயினும் அவர்தம்
இலக்கு ஓன்றே
இலக்கிய வாஞ்சை...
பிழைக்க தெரியாதவன்..
என்று கேலி செய்தாலும்..
எழுத்துக்கள் மட்டும் தான்
எங்கோ வலியில்
துடிக்கும் மனிதனின்
மனதிற்குள்
மருந்திடும் என்பதாக
பேனா பிடிக்கிறார்கள்
இளம் எழுத்தாளர்கள்..
ஆனால் அவர்களை
புரிந்து கொள்ள
மறுக்கும் உலகு..
துஞ்சம் என்று தூக்கி
எறிந்து விட்டு..
உலகை வெறுத்து
சென்றாலும் -- அவரின்
எழுத்துக்களை
படித்தால் தான்
விளங்கும்...
வேதனைகளின்
குவியலை
மனதினுள்
உள்ளடக்கி
முன்பின் தெரியா..
மனிதருக்கு
வாழ வழி காட்டும்
கவிதை களஞ்சியங்கள்..
கவிஞர்கள் மறைந்தாலும்..
அவர்களின்..
எழுத்துக்கள் மறைவதில்லை.

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...