எத்தனை உயிர்கள் மாண்டனர் என்று கணக்கு இன்னும் தெரியவில்லை.இதுவரையில் காணொளியில் பார்த்த காட்சிகளே இன்னும் கண்களை விட்டு அகலவில்லை.
இதற்குள் வடநாட்டிலும் கனமழை என்ற செய்தி மனதை ரணப்படுத்துகிறது.
எல்லோரும் ஓர் நாள் மண்ணுக்குள் தான் போகப் போகிறோம் என்பது புரிகிறது.ஆனால் அமைதியும் ஆனந்தமும் தந்த இயற்கை இப்படி கோரதாண்டவம் ஆடி பலவீடுகளையும் உயிர்களையும் மண்ணுக்குள் அதுவாகவே புதைத்து விட்டதே..
இறந்து போனவர்களுக்கு இறப்பு வலி எப்படி இருந்திருக்கும்...இதை போன்றதொரு பேரழிவு நடக்காமல் இருக்க ஆண்டவனை பிராத்தனை செய்வோம்.
வயநாடு தனது சோகங்களையும் துயரங்களையும் கடந்து மீண்டு வர வேண்டும்.
அங்கே குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் ஓவ்வொரு மனிதனுக்கு நம்பிக்கையும் வாழ்வு தரவேண்டியது நிச்சயம்.
No comments:
Post a Comment