காவேரியில் இருந்து
லாரி லாரியாக
அள்ளிச் சென்றனர்
மணலை...கேள்வி கேட்ட
சில சமூக ஆர்வலர்களை
அடக்கி துடித்தனர் சிலர் .
மணலை அள்ளுனா
உன் அப்பன் வீட்டு
சொத்தா போகுது...
தொலைச்சு போடுவேன்...
எதிர்க்க திராணியின்றி
ஓதுங்கி நின்றனர்...
இயற்கையை சுரண்டியதை
வேடிக்கை பார்த்த மழை மேகம்
கண்ணீர் விட்டு அழுதது...
காவேரியின் மணல்
மழையில் சரிந்தது ...
காவேரி ஆறு போல் ஓடியது...
முன்னணி பத்திரிகைகளில்
தலைப்பு செய்திகளில்
மண்சரிவு ..
No comments:
Post a Comment