கடவுளா...காதலா...

 கடவுள்... காதல்...

இரண்டுமே 

இலக்கியத்தில் 

படிக்கும் போது 

மிகவும் சுவாரசியமாகவும் 

வியப்பூட்டுவதாகவும் 

இருக்கும்.. ஆனால் 

நடைமுறையில் 

இரண்டுமே இனிமையான 

இருப்பது மிகவும் சிலருக்கே 

காதல் திருமணம் கேட்க 

இனிமையானது வாழ்ந்து 

பார்பவனுக்கே அதன் 

வலிகள் புரியும்.. 

கடவுளும் கூட அப்படித்தான் 

தியானம் செய்பவனை 

பார்த்தால் ஆசை வரும்..

தினமும் அவன்படும் 

அமானுஷ்ய அவஸ்தை 

யாரிடமும் பகிர முடியாத 

உண்மைகள்.. வெளியில் 

சொன்னால் பலரின் 

மனதை அது சுட்டுவிடும்..

பத்து வருடங்களுக்கு 

பிறகு நடக்கபோவதை 

கூட பத்து இமைதுளியில் 

சொல்லி விட்டு போங்கடா 

நீங்களும் உங்க போலியான 

உலகமும் என்று கடந்து செல்வான் 

அந்த பரதேசி தேடுவது பணத்தையும் 

தாண்டிய உண்மையான 

பாசத்தையும் நிலையான 

பேரமைதியென்னும் 

பிரபஞ்சத்தையும்...

எதுவுமே தெரியாமல் 

ஜோசியம் என்ற பெயரில் 

காசு பிடுங்கும் பலரையும் 

புறந்தள்ளி ஆன்மீகத்தில்

முன்னேறுகிறான்...

போலிகள் தான் 

ஆண்டவனை அடைய 

துடிப்பவனுக்கு  வண்ணமயமான  

திசைகாட்டி பலகைகள்..

எனவே தான் பல 

சன்னியாசிகள் 

மெளனமாய் கிடக்கின்றனர் ..

அறிந்தவன் பிதற்றுவதில்லை 

பிதற்றுபவன் அறிவதில்லை

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...