அப்பாவின் திமிர்

 பல லட்சம் 

சம்பளம் வாங்கினாலும் 

இந்த வேலையை 

தக்கவைக்க நினைத்து 

ஆயிரம் யோசனையுடன் 

யாரிடமும் உண்மையாய் 

சிரித்து பேச முடியாமல் 

தவிக்கும் சாதாரண 

அலுவலக தலைவராக நான்..

எப்போதாவது கிடைக்கும் 

சின்ன சின்ன வேலைகள் 

கிடைத்த சிறு வேலையை 

கூட அதுவே தனக்கு கிடைத்த 

முதலும் முடிவுமான வேலையை 

போல் சிரத்தையாக சிரித்த 

முகமாய் செய்த தகப்பன்..

நீ பார்த்த வேலைக்கு இதுவே 

அதிகம் கூலியை குறைத்து 

கொடுத்த அதிகார வர்க்கம்...

ஆனால் அந்த முதலாளிகள் தான் 

அவனை பல இடங்களுக்கு 

அனுப்பி வைத்து இரண்டு மடங்கு 

கூலி வாங்கி கொடுத்தனர்...

இங்க பாரூ ஏதோ கஷ்டபடுறீயே

அதான் சொல்லுறேன் என்னோட 

பெயரை நீதான் காப்பாத்தணும்...

ஓவ்வொரு முதலாளியும் அவனையே 

தேடினர்.... காய்ச்சலில் படுத்த 

படுக்கையாக விழுந்தவனை 

கண்டு கொள்ளாமல் உதாசீனம் 

செய்து எள்ளி நகையாடிய 

உறவுகள்.... அவனை தேடி வந்து 

ஏன்டா உனக்கு அறிவே கிடையாதா...

எனக்கு சொல்லி அனுப்பினா என்ன..

ஆடம்பர காரில் வந்து இறங்கிய 

மாபெரும் முதலாளி சில நொடிகளில் 

சைரன் ஓசை பறக்க அலறியடித்து 

ஓடிவந்த காவல்துறை அதிகாரிகள்.

ஐயா உங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்..

நண்பர்களே இந்த கவிதை விரைவில் சிறு கதையாக எழுதப்படும் ஏன்னா ரொம்ப நிறைய விஷயம் இருக்கு இது பற்றி எழுத 


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...