கடவுளும் கடனும்

 ஓரே ஓர் நாள் ஓரே ஓர் தடவை கடவுள் தன்னோட பக்தன் கிட்ட பேச நினைச்சு வந்தார்... கடவுளுக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு..

ஆனா அங்கே நடந்த கதையே வேற... மேலும் படிங்க விஷயம் ரொம்பவே சுவாரஸ்யமானது...

இங்க பாரூ நான் தான் நீ தேடின வேண்டிய கடவுள் உன்னோட அன்பு என்னை வானத்தில் இருந்து பூமிக்கு வர வைத்து விட்டது என்று அன்போட சொன்னாரூ...

அப்போது பக்தனாக தன்னை காட்டிக் கொண்டு அடிக்கடி கடவுளை வணங்கியவன் சொன்ன வார்த்தை கேட்டு கடவுளே ஆடி போயிட்டார்..

அது சரி என்னோட பெயர் அட்ரஸ் எல்லாம் உனக்கு யார் கொடுத்தது அதை முதலில் சொல்லு..

அட நீ தானப்பா தினமும் என்னை வணங்கினேன்..சில நேரங்களில் ராத்திரி 10 மணி 12 மணி ராத்திரி முழுவதும் கூட என்னை நினைச்சு வணங்கினாயே...


நீ சொல்லுறது எல்லாம் உண்மை தான்... நான் பண்ணியதை நீ ஓளிஞ்சு நின்னு பார்த்திருக்கே போலத் தெரியுதே...

கடவுளுக்கு கொஞ்சம் எரிச்சலா இருந்தாலும் பல வருடங்களாக பிராத்தனை செய்த பக்தன் என்று பொறுமையா பேசுனாரூ 

அடேய் நீ தான்டா நான் வணங்கிய கடவுள்... அப்படின்னா நான் பேங்க்-ல் வாங்கி இருக்கும் கடன் எவ்வளவு அதில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டி இருக்கு சொல்லு பார்க்கலாம் என கேட்டார்.

கடவுளுக்கு அவனின் நோக்கம் புரிந்தது...நீ கடன் வாங்கும் போது என்கிட்ட சொல்லிகிட்டா வாங்கினே என கோபமாக பேசினார்.

நீ தான் என்னோட கடவுள் என்றால் நேத்து ராத்திரி கூட நான் வாங்கி கடன் இதுவரையில் அதற்கான வட்டி இதையெல்லாம் சொல்லி கடனை சீக்கிரமா அடைக்க ஏற்பாடு பண்ணு என சொன்னேனே அதை ஏன் நீர் இன்னும் செய்யலை

அது சரி மாதம் தோறும் உன் பெயரை சொல்லி என்னோட வருமானத்தில் 10% சமயத்தில் 20% வரைக்கும் கூட வந்து ரூ வாங்கிட்டு போறானே அவன் அந்த பணத்தை வைச்சு என்னவெல்லாம் பண்ணுறான்னு சொல்லு பார்க்கலாம்..

தம்பி நான் உன்னை படைச்ச கடவுள் எனக்கு எதுக்குப்பா பணம்...

யோவ் நீ அதிகமாக பேசாதே நீ தான் உன்னை கூப்பிட சொந்தமா இடம் வாங்கி அதில் உன்னை கூம்பிட்டா தான் சந்தோஷமாக எங்களை ஆசிர்வதிப்பீர் என்று அந்த ஆள் சொன்னானே 

கடவுளுக்கு மிகவும் தர்ம சங்கடமாக போனது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தார்..


நீர் கடவுளாவே இருக்கட்டும் என் முன்னாடி நான் வணங்குற மதம் சார்ந்த கடவுள் பெயரை சொல்லி வந்து நிக்கிற நீர் முந்திய தெருவில் எந்த மத அடையாளத்தோட போனீங்க சொல்லும் என்றான்..


அவருக்கு எரிச்சலாக வந்தது..தம்பீ நீ தினமும் வணங்கியதால் தான் நேரில் வந்தேன் நீ இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்னை அசிங்கபடுத்துவே என்று நினைக்கவே இல்லை என்றார்..

கடவுளே நான் உங்களை கேவலமா நடத்தலை..ஆனா கடவுளோட உங்க பெயரை சொல்லி கிட்டு..உங்களோட பவரை உலகெங்கும் பரப்பும் நோக்கத்துடன்தான் ரொம்ப பேர்...பல ஏக்கர் நிலம் பேங்க பேலன்ஸ் என்று வாங்கி குவிக்கிறாங்க..


அது மட்டுமா... நீங்க எல்லாம் நிறைய நிறைய காசு கொடுத்தால் தான் நம்ம கடவுளோட நல்ல செயலை எல்லா இடத்திலும் போய் சொல்ல முடியும் அதனால் நிறைய காசு கொடுங்க என்று ஏழை நடுத்தர மக்களிடம் பணத்தை கடவுள் சேவை என்ற பெயரில் வாங்கி பெரிய பணக்காரனா ஆவுறாங்க அதாவது உமக்கு தெரியுமா என்றான்..


அவனிடம் இருந்து தப்பித்தால் 

Co Ltd..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...