கடவுளை ஏதோ
தனக்கு மட்டும்
சொந்தமானவர் போலவும்
எதிரில் இருப்பவருக்கு
அவரின் அருமையை
காண்பித்து கொடுக்க வேண்டி
துடிக்கும் அந்த போலி
இறைவன் காட்டும் சாமியார்
அல்ல அல்ல கடவுளை
காட்டுவதாக சொல்லி
அப்பாவி மக்களிடம்
காசு வாங்கலாம் என்பதை
அறிந்த கடவுளின் போலி
ஊழியர்...சில ஆபாச
சஞ்சிகைகள் கூடவே
மிகவும் உன்னதமான அந்த
புத்தகம்...ஏனோ மனசு மிகவும்
வலிக்கிறது... ஆனால் அந்த
மனிதரின் பளிச் ஆடை..
ஏழைகளை தன்பக்கம் ஈர்க்க
துடிக்கிறது.....புதிய கட்டிடம்
திறந்து வைத்தார்..தனது
தகுதிக்கு மீறி கடவுளின்
நாடக தூதுவனுக்கு
முட்டையும் மசாலாவும்
கலந்து செய்த பிரியாணியை
பரிமாறி விட்டு அவரிடம்
கைகட்டி நிற்கிறான்
ஏழை சகோதரன்...என்னப்பா
""பிரியாணி சமைக்க தெரியாத" "
ஆள் கையில் மாட்டிகிச்சு போலையே...
வானத்தில் இருந்த கடவுள்
நினைத்தான் இந்த அப்பாவி
ஏழையை காப்பது கடமையென்று..
ஓவ்வொரு நாளும் அந்த அப்பாவி
ஏழையின் குடும்பத்தில் அனைவரும்
நோய்நொடியின்றி
நிம்மதியாக தூங்குகின்றனர்
கடவுள் இன்று எனக்கு தந்த வாழ்க்கை
என் தகுதிக்கும் மீறி சொர்க்கம்..
இறைவனே உனக்கு நன்றியென்று..
நேற்றைய ""ஏழை சகோதரன்""
இன்றைய ""பணக்காரன்"" - ஆனால்
போலியான இறை ஊழியர் அடுத்த வாரம்
கலெக்ஷன் எவ்வளவு கிடைக்குமென்ற
பயத்தில் பழைய வரவு கணக்கை
தூக்கம் தொலைத்து
கண்கொட்டாமல் பார்த்து
பரிதவிக்கிறான்.... அவனுக்கு
பின்னால் மகந்தகாச புன்னகையில்
சிரிக்கும் இறைவனை நினைக்க
மனமின்றி எண்ணுகிறான்.... பணத்தை..
பிறருக்கு தனக்கு செய்யும்
பசப்பு வார்த்தைகளையும்
அறியாத கள்ளமில்லாத
கடவுளின் பக்தனோ. வேறு உலகில்
.சஞ்சரிக்கிறான்...அவனின்
தூய்மையான இதயத்தில்
துயில் கொள்கிறார்... இறைவன்
No comments:
Post a Comment