நாத்திக வேடதாரி

கடவுள் இல்லையென்று

மீண்டும் மீண்டும்
சொல்கிறான் -நாத்திகன்
ஆத்திகனோ என்றாவது ஓர் நாள்

மட்டுமே கோவிலுக்கு

போகிறான் கடவுள் மீதான
முழு நம்பிக்கையுடன்.. ஆனால்

நாத்திகனின் நினைவுகள்

எப்போதும் கோவிலை பற்றியே

ஆனாலும் அடிக்கடி உதட்டில்

சொல்கிறான் கடவுள் இல்லையென்று...

சாலை விபத்தை காணும் போதும்.

மாபெரும் அரசியல்வாதி

தலைவர் பதவியில் இருந்தே

தலைகுப்புற விழும் போதும்

எதிர்த்து பேசவே இயலாத

அரசியல்வாதிக்கு எதிர்பாராத

புதுவிதமான நோயில்

ஆஸ்பத்திரியில் அவர்

அனுமதிக்கப்பட்டு

உயிருக்கு போராடும் போது

தலைவர் சோலிமுடிச்சுது

இனிமே நானே கட்சி

தலைவன் என்று

அடுத்த கட்ட தலைவர்கள்

ஒருவரையொருவர்

அடித்து கொண்டு பதவியை

பங்கிடும் போதும்

நேற்று வரை உதாசீனமாக

நடத்தப்பட்ட தொண்டன்

அரசியல்வாதியாக தலைவர்

பதவியில் அமரும் போதும்...

உடனிருப்பவரிடம் சொல்கிறான்

அந்த நாத்தின் ககவலையோடு

கீழே இருப்பவனை

மேலே போக வைக்கிறான்

மேலே இருப்பவனை நொடிகளில்

கீழே விழ வைக்கிறான்.. நான்

மட்டும் கடவுளா இருந்தா

இப்படியெல்லாம் பண்ணவே மாட்டேன்..

நாத்திகன் மனதிலும் தொடங்கியது
கடவுள் நம்பிக்கை - ஆயினும்
இப்போதும் அவர்

கடவுள் எதிர்ப்பு நாத்திக வேடதாரி


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...