சொர்க்கம்

ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு விதமான கவலையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறான்...

ஆனால் இந்த அவனுக்கு தீர்வு சொல்லி தீர்த்தான் ஆட்கள் இல்லை.

பணம் இல்லையா லோன் தருகிறேன்.. என்று தான் சொல்லுறாங்களே தவிர அந்த மனிதனை பொருளாதார ரீதியாக உதவி செய்து கை தூக்கி விட எத்தனை பேர் இருக்காங்க 

இந்த உலகில் எல்லோருமே நல்லவங்க தான் ஆனாலும் தனிப்பட்ட சுயநலத்தோட தான் வாழுவாங்க.. யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காம வாழ்ந்து பாருங்க..வாழ்கை சந்தோஷமா இருக்கும்...உதாரணமா காலையில் எழுந்தவுடன் உங்க வீட்டில தினமும் சூட சூட பஜ்ஜி போண்டா காபி சகிதம்  இந்தாங்க சாப்பிடுங்க என்று சொன்னா நல்லா தான் இருக்கும்..ஆனா பணக்கார வீட்டில் இருப்பவர்களுக்கு அது சாத்தியம் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வு வேலை போனா தானே சம்பளமே


ஓவ்வொரு நாளும் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் கஷ்டபட்டு சம்பாதிக்கும் பணத்தை தினமும் கொஞ்சமாவது சேமித்து பழகுங்கள்..


ஏன்னா உங்களுக்கு யாரும் ஆபத்து காலத்தில் பணம் கொடுத்து உதவாம இருந்திருக்கலாம்..ஆனா அதே தவறை நீங்க மத்தவங்களுக்கு செய்து வீடாதீங்க..


அவன்கிட்ட நிறைய பணமிருக்கும் ஆனாலும் யாருக்கும் எதுவும் கொடுத்து உதவ மாட்டான் என்று பிறர் சொல்லும் போது ஏற்படும் வலிக்கு மருந்தே இல்லை.


சில ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவனால் தனது செலவு போக மிச்சம் இருக்கும் பணத்தில் ஓர் சிறு தொகை தான் கொடுத்து உதவ முடியும் என்பதை புரிந்து கொண்ட உறவுகளும் நண்பர்களும் கிடைத்தால் அதுவே சொர்க்கம் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...