ஏழை வீட்டில் பிறந்த குழந்தைகளால் மூணு மொழிகளை படிக்க முடியாது கஷ்டபடுவாங்க என்று சொல்வது எதனால்... ஏன் இத்தனை வலியை ஏழைகள் குழந்தைகளுக்கு தருவது ஏன்.
பாமர மக்களுக்கு தரமான கல்வியை அரசு வழங்குவதில் ஏன் இத்தனை முரண்பாடுகள்.
தனியார் பள்ளிகளின் வருமானம் குறைந்தது போகும் என்ற அச்சத்தால் ஏற்பட்ட பதட்டமா.. அல்லது இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததால் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையா.
கல்வியின் தரம் நாடு முழுவதும் ஓரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று பல கல்வியாளர்களால் குழு அமைக்கப்பட்டு, கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளனர்.
அதாவது எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஓரே மாதிரியான கல்வியும் கிடைக்க செய்யணும் என்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.
1970 -ம் ஆண்டுக்கு முன்னர் எத்தனை தனியார் பள்ளிகள் இருந்தன, இப்போது எத்தனை இருக்கின்றது என்று கணக்கெடுத்து பாருங்கள்.
இங்கே இருக்கும் எல்லா தனியார் பள்ளியிலும் தேசிய மொழியான ஹிந்தி மட்டுமல்ல உலகநாடுகளின் பல மொழிகள் சொல்லி கொடுக்கப்படுகின்றது
ஆங்கிலம் தவிர பிரெஞ்சு லத்தின் போன்ற மொழிகளும் சொல்லி தரப்படுகின்றது.
அப்படி இருக்கையில் மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழி கொள்கையில் மட்டும் முரண்பாடு இருப்பதாக முரண்டு பிடிப்பது ஏன்..
ஆம் ஹிந்தி மொழி அந்த பாட திட்டத்தில் ஓர் சிறு பகுதி தான்.அதை மட்டும் வைத்து கொண்டு நீங்கள் எதிர்ப்பது ஏன்.
காமராஜர் ஆட்சியில் கூட தனியார் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டன ஆனால் அவையனைத்தும் தமிழ் வழி பள்ளிகள்.
ஆனால் ஹிந்தியை எதிர்ப்பதாக சொல்லி இருமொழி கொள்கை அடிப்படையில், நீங்கள் தொடங்கிய எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் ஹிந்தி சொல்லி தரப்படுகிறது என்பதை நீங்கள் மறந்து வீட்டீர்களா அல்லது மறைத்து விடுவீர்களா.
இன்னும் சேரியில் வாழும் பல குழந்தைகள் ஹிந்தி மொழியை படிக்க இயலாமல் இருக்கிறது. ஆனால் பணமிருப்பவரின் குழந்தைகள் ஹிந்தி மொழி படித்து மத்திய அரசு வேலையில் அமர்கிறது.
ஏன் இந்த பாரபட்சம், எங்களின் ஏழை குழந்தைகளுக்கு மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை கிடைத்தால் நல்லது தானே.
எங்களால் மாதம் தோறும் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வைக்க இயலுமா.. அதனால் புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவு கொடுத்து அதை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்ககள்
அப்படி செய்தால் அதில் ஓர் பாதகமும் இருக்கிறது, ஆனால் அந்த பாதகம் மக்களுக்கு அல்ல..செலவே இல்லாமல் நல்ல தரமான கல்வி கிடைக்கும் போது நாம் ஏன் நம்ம பிள்ளைக்கு பல ஆயிரம் செலவு செய்யணும்.. நாமும் நம்ம குழந்தைகளை மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை உள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமே என்று முன்வருவர்.
இதனால் தனியார் பள்ளிகளுக்கு தான் நஷ்டமே தவிர மக்களுக்கு அல்லவே.
மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே, உங்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்கள் தான்.
எனவே சிறப்பாக தான் பாடம் சொல்லி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அதை போலவே புதிய கல்வி கொள்கை நடைமுறை செய்யப்பட்டால்,நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதனால் மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.
தயவுசெய்து ஏழை மக்களுக்கும் புதிய கல்வி கொள்கை கிடைக்க வழி செய்யுங்கள் அல்லது எல்லா தனியார் பள்ளியிலும் 50 ஏழை மக்களின் குழந்தைகளை காசு வாங்காமல் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று சட்டம் இயற்றுங்கள்.
ஏனெனில் அதுவே சமூக நீதியாக அமையும்
அரசு பள்ளியில் மட்டும் தான் இருமொழி கொள்கை உள்ளது.. ஆனால் மற்ற மேட்ரிகுலேஷன் CBSE.. எல்லாம் மும்மொழி சொல்லி தருகிறார்கள் பல ஆயிரம் பீஸ் வாங்கிட்டு நிறைய ஆட்டோ ஓடுவதற்கு காரணமும் ஆங்கில பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வருவதால் ஆட்டோக்காரர்களுக்கு வருமானம் கிடைக்கிறது .அத்தையை ஆட்டோ ஓட்டுனர்களின் பிள்ளைகளுக்கு மும்மொழி கிடைத்தால் என்ன தவறு இருக்கிறது.. ஏழைகள் மட்டும் மூணு மொழி படிக்க கூடாதா.....அவ்வளவு ஏன் முதல் பாடமா அயல்நாட்டு மொழி.ஆங்கிலம்..ஹிந்தி படிக்கிறாங்க.. ஆனால் அரசு பள்ளியில் ஏழை குழந்தைகளுக்கு ஹிந்தி படிக்க சொன்னா மட்டும் மொழி போர் என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்.. நாம் இந்திய நாட்டின் ஓர் அங்கம்..
No comments:
Post a Comment