சாதாரண மனிதன்

கட்சிகள் மாறிவிட்டது ஆனால் காட்சிகள் மாறவில்லை....

ஐயா உங்களை தோற்கடிக்க பெரிய சதி வேலையே நடக்குது என்ற போது.. யோவ் ஏன்ய்யா என்னோட மக்களை பத்தி என்கிட்டையே தவறா சொல்லுறே.. இன்னொரு தடவை இப்படி சொன்னே பிறகு நான் இதுவரைக்கும் இல்லாத மாதிரி உன்னை திட்டி போடுவேன்..நாம நல்லபடியா மக்கள் பணி செய்யுறோம் அதனால் மக்களுக்கு நம்மை பத்தி புரிஞ்சுப்பாங்க என்ற அந்த ஓர் நல்ல அரசியல்வாதி...

அவர் அரசியலில் தோற்ற போதும்..ஐயா எதிர்கட்சிகாரனுங்க கள்ள ஓட்டு போட்டு தான் இப்படி ஆச்சு என்று அவரிடம் சொன்ன போதும்..யோவ் ஓட்டு ஓண்ணு தான் அதை நல்ல ஓட்டு கள்ள ஓட்டு என்று சொல்லி கொச்சைபடுத்தாதீங்க..மக்களுக்கு ஏதோ மாற்றம் தேவைபடுது போலே...ஓருத்தனே தொடர்ந்து ஆட்சியில் இருக்க இது என்ன மன்னராட்சியா..நாம ஆசைப்பட்டு போராடி வாங்கிய ஜனநாயகம் நல்லா வளர்ந்து இருக்கு என்று சந்தோஷபடுங்கய்யா என்று யதார்த்தமான உண்மையை ஏற்றுக் கொண்ட ஓர் நல்ல தலைவர்.. இப்போதும் சில நல்லவர்கள் இருக்கின்றனர்.. அவர்களைப் போலவே..இது தான் அரசியல் போல.. இன்றும் கூட அரசியல் மேடைகளில் அதிர்வுகள் நடக்கிறது.

 மேடையில் இருக்கும் பலருக்கு புரியாத மாற்றங்கள் கட்சியின் மீது அபரிமிதமான அன்பும் பாசமும் விசுவாசமும் கொண்ட கட்சி தொண்டர்கள் சிலர்..ஏனோ கட்சிகள் தான் மாறியதே தவிர காட்சிகள் மாறவில்லை... அரசியல் என்பதே மாற்றங்களுக்கு உட்பட்டது தான் போல்... இப்படிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஓர் முறை வாக்கு சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயக கடமை நிறைவேற்றும் ஓர் சாதாரண மனிதன் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...