லாட்டரி சீட்டு பத்து கோடி

 ஏன் அந்த குடிசை வீட்டின் முன்னாடி இவ்வளவு கூட்டம்..ஏதாவது சாவு வீடா..அட நீங்க வேற நேற்று வரை பிச்சைக்காரனாக இருந்தவனுக்கு  லாட்டரி பத்து கோடி ரூபாய் பரிசு விழந்து இருக்கு.அது அவனுக்கு தெரியுமா..அட அவன்கிட்ட செல்போன் வாங்கவே காசில்லாத ஏழை...இன்னும் தெரியாதை.. அதை அவங்க கிட்ட சொல்லுவதற்கு தான் அவனோட சொந்தமும் நண்பர் என்று பலர் வந்திருக்காங்க..அட நேத்து வரை அனாதை மாதிரி இருந்தானே..அட நீ வேற பணம் வந்தா பலபேர் பறந்து வருவான் இந்த விஷயம் கூட உனக்கு தெரியாதா. அது சரி இரண்டு பெரிய காரில் ஏதாவது அரசு அதிகாரி மாதிரி இருக்காங்களே அவங்க யாரூ..அட அவங்க தான்ப்பா இந்த ஊரில் இருக்கும் பெரிய வங்கியின் தமிழகஸவிற்பரை பிரிவு பிரதிநிதிகள்..அவங்க எதுக்கு இவனை பார்க்க வந்திருக்காங்க..அது வேற ஓட்ணுமில்லை..சார் எங்க பேங்கில் நிறைய வட்டி தருகிறோம்.அதை எங்க கிட்ட இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க ஏன்னா பணம் தண்ணி மாதிரி நிறையவே வந்த மாதிரி இருக்கும் அதை சேர்த்து வைக்காவிட்டால் அது காணாமல் போய்விடும் மேலும் நிறைய காசு இருப்பதால் உங்களை தேடி பலரும் வருவாங்க இந்த காசு எல்லாம் காலியா போனால் பிறகு யாரும் உங்களை தேடி வர மாட்டாங்க..அதனால் பணத்தை பத்திரமா பார்த்துக்கோங்க என்று சொல்லிட்டு போக வந்திருக்காங்க...

ஏழை வீட்டின் கதவு திறந்தது.. மன்னிக்கவும் மன்னிக்கவும்...கோடீஸ்வரரின் வீட்டு வாசல் திறந்தது... தனது மகனுக்கு கோடி ரூபாய் விழுந்தது தெரியாத கிழவி வாசலை திறந்தாள்...

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது ஏன் இத்தனை கூட்டம்.. நீங்களெல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க.

அந்த பாட்டியின் குணத்தை நன்கு அறிந்த சொந்தமும் அவனின் நண்பர்களும் மெளனமாக இருந்த போது பேங்க் மேனேஜர் வாயை திறந்து பேசினார்.. நான் இந்த ஏரியாவுல இருக்கிற HUSGK Bank மேனேஜர், உங்க பையனை பார்க்கத்தான் வந்தேன்.

பதிலுக்கு பாட்டி கேட்ட கேள்வியை கேட்டு அந்த மனிதர் ஆடித்தான் போனார்... இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பேங்க் உண்டா..

சுற்றி நின்ற அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.. இப்போ தெரியுதா நாங்க ஏன் இந்த கிழவிகிட்ட பேசலை என்று..இவ எமகாதகி ஓரு பயலும், இவகிட்ட வாயை கொடுத்து மீள முடியாது. கேள்வி மேலே கேள்வி கேட்டே கொன்னுடுவா 

இந்த பையன் எப்படி தான் சமாளிக்கிறானோ.. கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்.


சுற்றி மாபெரும் கூட்டம் இருக்கிற என்ற பிரமை கூட இல்லாமல், அதை பற்றி சிந்திக்க கூட நினைக்காமல்..ஏலே எருமை மாடு உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..எந்த நாயீ கடன் கொடுத்தாலும் வாங்காதே என்று.. நான் தான் உனக்கு மூக்கு முட்ட மூணு வேளை சாப்பாடு போறேனே இதை விட உனக்கு என்னதான் வேணும்ன்னு போயி கடன் வாங்கி இருக்கே..

மேனேஜர் பதறினார்... கோடீஸ்வரர் மனசு கஷ்டபட்டு நமக்கு பத்து கோடி கிடைக்காம போச்சுன்னா... அம்மா உங்க பையன் யாரிடமும் கடன் வாங்கவே இல்லை.உண்மையை சொன்னா அவருக்கு இதுவரை எந்த வங்கியிலும் அக்கவுண்ட் கூட கிடையாது. தான் பெரிய விஷயத்தை பேசி விட்டது போல், சற்று முன் நமட்டு சிரிப்பு சிரித்த கூட்டத்தை தான் அந்த அம்மாவை எப்படி சமாளித்தேன் பார்த்தீர்களா என்று பெருமையாக ஓர் பார்வை பார்த்தார்.

அந்த பெருமை சில நொடிகள் கூட நிலைக்கவில்லை..யோவ் நான் உங்கிட்டயா கேள்வி கேட்டேன் என் புள்ளகிட்ட நான் கேள்வி கேட்டா அதுக்கு அவன் தானே பதில் சொல்லணும்..நீ எதுக்கு அவனுக்கு பதிலா பேசுறே...

இல்லம்மா அது வந்து... அது வந்து.

.. உங்க ஆபிஸ்லையும் நீ இப்படி தான் இருப்பீயா உன் வேலையை செய்யாம அடுத்தவனுக்காக பேசிக்கிட்டு இருப்பீயா.. ஓர் வேளை நீ பையனோட நண்பனா ஏன்னா அவனும் இப்படித்தான் முந்திகொட்டை மாதிரியே பேசுவான்.

டேய் எருமை மாடு , சீக்கிரமா வாடா..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...