வலிமை வளம் தரும்

 

உனக்கு இறைவன் வலிகளை தந்ததே உனது வலிமையை சோதிக்கத்தான்...

பலருக்கு உடனிருப்பவர்களால் பிரச்சினை வரும்.. உன்னை தனக்கு நிகராக இறைவன் நினைத்த காரணமாகவே இத்தனை வலியை தந்தான் போலும்.


தன்னை நம்பும் பக்தனை இறைவன் சோதிப்பதே...நீ சாதிப்பாய் என்பாய் என்ற நம்பிக்கையில் தான்..


துணிந்து நில் வலியே வலிமையாக்கும் நாள் விரைவில் வரும் 


ஊரும் நாடும் நேரத்திற்கு தகுந்தாற் போல் நாக்குகளை சழற்றி பேசுவது இயல்பான விஷயம் தான்.


நீ யார் என்பதை பிறர் சொல்ல கேளூ.. ஆனால் நீ யார் என்பதை நீ முதலில் உணர்ந்து கொள்...


இது உலகில் எதுவுமே நிரந்தரமில்லை..


விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை நீ அணிந்து செல்லும் போது இந்த உலகம் உன்னை மிகவும் மரியாதையாக பார்க்கும், அந்த மரியாதை என்னும் சகதியில் மாட்டி விடாதே..

அந்த மரியாதை எல்லாமும் உனது பணக்கார தோரணைக்கு தானே தவிர உனக்கானது அல்ல.நீ சென்ற இடத்தில் உன்னை விட சற்று பகட்டுடன் இன்னொருவர் வந்தால் உன்னை மறு நொடியே உதாசீனம் செய்து விட்டு சென்ற விடும் மக்கள் கூட்டம்..


நீ நீயாக வாழு... எந்தவிதமான கனத்தையும் கவனத்தையும் தலைக்குள் ஏற்றிவிடாதே...பதவி புகழ் அழகு அதிகாரம் இவை அனைத்தும் மாறக்கூடியது 

மாறாத ஓன்று உலகில் உண்டு என்றால் அது இறைவனின் அன்பு மாத்திரமே 

எனவே அனைவரும் சொல்கின்றனர் 


தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி.அன்பே சிவம் 


நானே ருத்ரன் நானே கணபதி நானே கார்த்திகேயன் நானே எல்லா ஜீவராசியிலும் வியாபித்து இருக்கும் பரந்தாமன் என போதித்த பகவத் கீதையில் மொழியை உலகறியச் செய்வோம் 


நீ தினமும் அலங்காரம் செய்து கொள்ளும் உடல் கூட உயிர் இருக்கும் வரை தான் மரியாதை..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...