முதியோரின் வலிகள்

 அய்யோ அப்பா நீ இப்படி பண்ணுவே என்று நாங்க நினைச்சு கூட பார்க்கலையே..


அடிவயிற்றில் இருந்து வரும் அந்த குரலில் தான் எத்தனை நம்பிக்கை.

ஆறு பிள்ளைகள் இருந்தும் நாங்க உன்னை சரியா கவனிக்கவில்லை தானோ என்று ஏழைகளின் ஏக்கத்தின் வலிகள்.


ஆறு பிள்ளைகளின் வீடுகளில் இருந்தும் சுழற்சி முறையில் சாப்பாடு கொடுத்த போதிலும், வெளியே சொல்ல இயலாமல் தவித்த பாட்டி தாத்தாவின் வலிகள். இன்று செய்தியாக வரும் போது எல்லோரின் மனதையும் கரைக்கிறது 


தனது சொந்த மனைவியை கொலை செய்து விட்டார் என்று சட்டத்தின் முன்னால் அவர் தண்டிக்கபடலாம்..


ஆனால் மகாத்மா காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் வலியாய் துடித்த கன்று குட்டியை கொல்ல சொன்னதாக படித்த கதை தான் நினைவு வருகிறது.


ஆம் ஒருவரின் மீது நாம் வைக்கும் அதீதமான காதல் முட்டாள்தனமாக பிறருக்கு தெரியலாம்.ஆனால் தான் காதலித்த, தன்னிடம் அன்பு செலுத்திய மனைவியின் வலியை பார்ப்பது எவ்வளவு பெரிய கொடிதான வலி..


ஓவ்வொரு நாளும் அவள் படும் வேதனை, அய்யா நாம பிள்ளைகளை நல்லாதானே வளர்த்தோம் என்று அவள் கேட்டு இருப்பாள் தானே.. அந்த முதியவரும் தனது பிள்ளைகளுக்காக எவ்வளவு தூரம் மனதில் ரணத்தை சுமந்து உழைத்து இருப்பார்.


நாம் அன்பாக வளர்க்கும் நாய்க்குட்டி இறந்தாலே தாங்க முடியாது.


இந்த செய்தியை ஓர் செய்தியாகவே கடந்து சென்று விடலாம்.  இதை  ஓர் தகவலாக கூட அறியவிரும்பாமல் வேகமாக கடந்து செல்லும் இயந்திர உலகில் தான் நாம் இருக்கிறோம் 


பகவத் கீதை பைபிள் குரான் இன்னும் எத்தனையோ மதநூல்கள் தாய் தந்தையரே தெய்வம் என்கிறது.


இங்கே கடவுளே இல்லை என்று ஆர்பாட்டம் செய்வதால் சிலருக்கு மத நூல்களின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது இயல்பு தான்.



மீண்டும் ஓர் விதி செய்வோம் கடவுள் இருக்கிறார். 

தாய் தந்தை என்று இருவரும் தான் முதல் கடவுள் என்றே நமது அடுத்த தலைமுறைக்கு போதித்து வளர்ப்போம்.


இங்கே ராமாயணம் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் ராமன் அவதரிக்க காரணமாக இருந்ததே சிரவணணன் என்ற ஓர் பால்கன் 


தனக்கு என்று எந்த தனிப்பட்ட ஆசையும் இன்றி வயதான கண் பார்வையற்ற தாய் தகப்பனை தோளில் சுமந்து சென்றான்.


அது ஓன்றே இது போன்ற நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல் தடுக்க ஓரே வழி

இப்போ யாராலும் அப்படி செய்ய இயலாது தான்.பணம் பணம் என்று பேய் போல் அலையும் நிலையை சில நொடிகள் மறந்து நம்மை சுமந்த பெற்றவரிடம் குறைந்த பட்சம் சிலமணிநேரமாவது.சிரித்து பேசுவோம்



No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...