முதல்வர் நாற்காலி ஓர் மியூசிக்கல் சேர்

நேற்று வரை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர்.. விதியின் வசத்தில் சில உட்கட்சி பூசலால் பதவியை பறிகொடுத்து விட்டார்... இப்போது முன்னாள் முதல்வர் என்ற அடைமொழி மட்டும் அவருக்கு சொந்தமாக இருக்கிறது... அவரின் அருகில் இருந்த பலர் இன்று அவரோடு இல்லை என்பதை விட அவர் போன் போட்டால் கூட எடுப்பதில்லை... ஆம் அந்த மனிதரின் பெயரை சொல்லி சம்பாதித்த பலர் இன்று மீண்டும் தற்போதையமுதல்வர் அருகில் போய் நின்று கொண்டனர்...

அப்படி நிற்பவர்களுக்கு ஏனோ புரியவில்லை..இந்த முதல்வர் கூட முன்னாள் முதல்வர் ஆகும் போது தான் உண்மையின் வலிமையும்..அது ஏற்படுத்தும் வலியும் தெரியும் என்பது...

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை..

முதல்வர் நாற்காலி கூட உடனிருப்பவனால் எப்போது வேண்டுமானாலும் பிடுங்கப்படும் ஓர் மியூசிக்கல் சேர் தான் 

அவருக்கு அருகில் நிற்பவர் எப்போதும் நாற்காலியில் அமர தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்கிறார். ஏனெனில் அரசியல் முழுக்க முழுக்க அதிகார விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஏற்கனவே திருவள்ளுவர் இந்த அரசியல் அதிகார விளையாட்டைப் பற்றி உட்பகை என்ற பெயரில் எழுதியுள்ளார்.


காலப்போக்கில் ஒவ்வொரு அமைச்சரும் அடுத்த முதல்வராக முயற்சிப்பார்கள். பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக இதுதான் நடக்கிறது.

மேடையில் அமர்ந்து அதிகார விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்.

ஆனால் கட்சியை உண்மையிலேயே நேசிப்பவர் எப்போதும் தனது அரசாங்கத்தைப் பற்றி சிந்தித்து கவலைப்படுவார்.



No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...