ஆட்டோக்காரன்

 ஏன்ப்பா பத்து ருபாய்க்கு இப்படி பேசுறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா என்ற போதும்.. சார் எனக்கு இந்த கூலி கிடைச்சா தான் வண்டி வாடகை மற்றும் எல்லா செலவு போக காசு நிக்கும் என்றே காறாராக பேசினான்...மாலை நேரத்தில் அவர்களின் வீடு தேடி அலைந்து போய் வீட்டு வாசலின் கதவை தட்டினான்.. ஏன்ப்பா தெரியாதனமா உன் ஆட்டோவில் ஏறிட்டேன்...அது தப்பு தான் இப்போ எதுக்கு வந்தே இன்னும் வேற காசு வேணும்னா என்றே சலிப்புடன் கேட்டார் பரந்தாமன்.


அவனோ காலையில் காசு கேட்டத்தை மாத்திரமே இன்னும் மறக்காமல் இருக்கும் அந்த மனிதரை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாமல்..என்னை மன்னிச்சிடுங்க சார்.. நான் கொஞ்சம் கோபக்காரன் ஆனா நல்லவன் தான்.


உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எங்களுக்கு வேண்டாம், வீட்டிற்குள் இருந்து எரிச்சலுடன் வெளிப்பட்ட பரிமளா.


அம்மா, இத்தாங்க அவனின் கையில் இருபது பவுன் தங்க சங்கிலி மின்னியது.. ஏய் இது எப்படி உன் கையில் வந்துச்சு... இன்னிக்கு சாய்ந்திரம் ஆட்டோ கழுவும் போது பின்னாடி பெட்டி வைக்கும் இடத்தில் ஓர் ஓரமாக கிடந்தது, அவனின் வார்த்தையில் உண்மையும் உங்களோட நகை எனக்கு எதுக்கு என்ற திமிரும் வார்த்தைகளில் இருந்தது.


நேற்று கல்யாண வீட்டில் தன் மகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், அவள் முதன்முதலாக அமெரிக்கா போய் சம்பாதித்த பணத்தில் வாங்கி கொடுத்து அதே இருபது பவுன் சங்கிலி.


நீ பணத்தாசை பிடிச்சவ தானே, அதனால் தான் உன்னோட மகனுக்கு பெரிய பணக்கார இடத்தில் சம்பந்தம் பண்ணினே..என்னை மட்டும் ஏதோ ஓர் நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைபட வைச்சே..


தனது பளபளஙஅமெரிக்கா வாழ்க்கை அலுத்து விட்டது என்பதை சொல்ல வந்தவளின் வார்த்தைகள் நாலு வழிச்சாலையில் முக்கிய ஊர் கடந்து செல்வது போல் சென்றனர்.


அன்பான அம்மா மகள் இருவரிடமும் வார்த்தை விளையாட்டில் சண்டை இழுத்து விட்ட வேடிக்கை பார்த்த சொந்தங்கள்.


தள்ளி நின்று மர்ம புன்னகை செய்த அவளின் சித்தியும் அத்தையும்.. அம்மா நீ இப்போ பேச்சை நிறுத்து என்ற போது வார்தைகள் எரிமலையாக வெடித்து அந்த கல்யாண மண்டபத்தில் இவர்களின் வீட்டு சண்டை திருஷ்டி பொட்டாக அமைந்தது.


அந்த வெறுப்பில் இனிமே நீ வாங்கி கொடுத்து சங்கிலியை போட மாட்டேன் என்று சபதம் செய்து அதை பையில் எடுத்து வைத்த நினைவு. ஆட்டோவில் ஏறும் போது, அந்த பையில் ஜிப் திறந்த போதிலும் நகை அதில் இருப்பதை மறந்தே இருந்தாள்.


இப்போ இதை பார்த்த பிறகு எல்லாம் நினைவு வந்தது, நேற்று இரவெல்லாம் மகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினை தீர விடிய விடிய அவர்கள் போனில் பேசிய போதும் அவர்களின் ஆணவம் குறைந்து அன்பு பெருகியது.


அதை வாங்கியவள், தம்பி ஓர் நிமிஷம் உள்ளே வா.ஓர் கப் காபி சாப்பிட்டு போகலாம்.உங்க போன் நம்பர் இருந்திருந்தா ஆட்டோ ஸ்டாண்டில் வந்து வாங்கிட்டு போக சொல்லி இருப்பேன்... அதான் வந்தேன்.


தம்பி என் வீட்டுக்காரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, நீ நினைக்கிற மாதியெல்லாம் அவரால் உடனே வரமுடியாது.


எனக்கு அதெல்லாம் தெரியாது பர்மா, நீங்க எப்போ வந்தாலும், எனக்கு கவலையில்லை ஏன்னா உங்க நகையை நான் திருடலை தெரியாம என் வண்டியில் விழுந்துவிட்டது..


என்னோட ஆட்டோவில் ஏறும் ஓவ்வொரு மனுஷனோட உயிர் உடமை இரண்டையும் பத்திரமா பார்த்து கொள்வது தான் என்னோட எண்ணம்.


இப்பவே நாலு சவாரி போயிடுச்சு..


தம்பி இவ்வளவு நல்லவனா இருக்கீயே நீ என்ன படிச்சிருக்கே.


M.B.A...படிச்சேன் சரியான வேலையில் கிடைக்கலை.யாரடமும் கை கட்டி நிற்க மனசில்லை..ஏன்னா நேர்மையா வாழும் யாரும் யாருக்கும் கைகட்டி போலியா நடிக்க தெரியாது..எங்க ஸ்டாண்டில் நிறைய பேர் அப்படித்தான்..கோபக்காரங்க தான் ஆனா யாரோட பொருளுக்கும் ஆசைபட்டதில்லை..எதையும் சொந்த காசில் உழைச்சு வாங்கணும் என்று திமிர் எங்க உடம்புல ஓடுது..


அந்த வீட்டில் இருந்த வயதான இருவரும் வாயடைத்து போய் நின்றார்..


போன் சிணுங்கியது, எதிர் முனையில் மாவட்ட S.P பேசினார்.


அங்கிள் உங்களோட நகை காணும் என்று ஓர் கம்ளெண்ட் எழுதி கொடுங்க மத்த விஷயத்தை நாங்க பார்த்துகிளோம்..


அதுக்கு அவசியமே இல்லைப்பா... ரொம்ப தேங்க்ஸ்..மத்த விஷயத்தை நீ நேரில் வா பேசலாம்.


அவனுக்கு ஓர் நிமிஷத்துல வியர்வை கொட்டியது ஓர் வேளை,  போலீஸ் வந்து விசாரிச்சா எவ்வளவு அசிங்கமா போயிருக்கும்.. இதுக்கு மேல இங்கே நிற்க கூடாது என்ற நினைப்பில் கிளம்ப இருந்தான்.


அப்போது அந்த மனிதர் பேசினார்.என்னை மன்னிசிட்டுப்பா, நேற்றிலிருந்து அவளோட கழுத்தில் அந்த சங்கிலி இல்லாத கண்டு நான் தான் அந்த பையன் கிட்ட யாருக்கும் தெரியாம யதார்த்தமா விசாரிக்க சொன்னேன்.. 


காலையிலேயே எனக்கு கிடைச்ச தகவல் படி உன்னை மாதிரி நல்ல பொறுப்பான பையனை பார்ப்பதே கஷ்டமாம்.. கோடி கோடியாக கொள்ளையடிச்சு வாழ மக்கள் மத்தியில் ஓர் புத்தர் மாதிரி இருப்பவன் என்று உன்னோட ஸ்டாண்ட் மற்றும் தெருகமக்கள் பல சொன்னார்களாம்.


கவலைப்படாதே தம்பி உன்னை மாப்பிள்ளை பார்ப்பதா சொல்லி தான் அவங்க விசாரிச்சு இருக்காங்க..

இரண்டு தங்கச்சி அம்மாவுடன் நீ வாழும் அன்பான எளிமையான வாழ்க்கை ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு.

.

உன்னோட தங்கச்சி இரண்டு பேரும் கூட எங்க அண்ணா தான் எங்க உலகமே என்று சொல்லுவாங்களாமே..நீ நேர்மையா வாழ்வதை நினைச்சு அவங்க எவ்வளவு சந்தோஷமாக இருக்காங்க தெரியுமா..


சில நொடிகளில் காலுக்கு கீழே பூமி சுழல்வதை உணர்ந்தார்..


சார்.. சார்.. அப்போ நீங்க என்னை தப்பாவே நினைக்கலையா...


ஏன்னா இந்த வயசான காலத்துல எங்களுக்குள் மகன் மற்றும் மகள் என்ற வசதியான வாழ்வு வாழும் குழந்தைகள் காரணமாக புருஷன் பொண்டாட்டி இடையே சண்டை என்பதை யாரிடமும் சொல்ல முடியாம தவிக்கிற நிலைமை யாருக்கும் வரக்கூடாது..


அவரின் கண்கள் குளமாக பெருகியது.. சார் நீங்க என்ற போது.. நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஓர் சாதாரண மாவட்ட நீதிபதியாக வேலைக்கு சேர்ந்து ஹைகோர்ட் நீதிபதியாக ஓய்வு பெற்றவன்.

 பல கேஸ் பார்த்தவன் அதனால் யாரையும் உடனே கைநீட்டி தவறு சொல்ல மாட்டேன்...ஏன்னா போலியான குற்றச்சாட்டு அவங்க மனதை எப்படி பாதிக்கும் என்பதை அறிவேன்.


அவனுக்கு அவரை பற்றிய மதிப்பு கூடியது..


Sorry sir, நீங்க யாருன்னு தெரியாம நேத்து...

அடவிடுப்பா நீ பேசியதில் எந்த தவறுமே இல்லை.நீ கோபமா பேசும் போதே நீ ரொம்ப நல்லனா தான் இருப்பே என்று நினைச்சேன் ஆனாலும் பாழாபோன புத்தி நாலு விதத்தில் யோசிக்க தானே செய்யுது..


தம்பி உங்க வீடு எங்கே இருக்கு அப்பா என்ன பண்ணுறார் 


அந்த வார்த்தையை கேட்டவுடன் அவன் தலைகுனிந்து நின்றான்..


ஏன்ப்பா நான் ஏதாவது தவறா கேட்டு விட்டேனா..இல்ல சார் எங்க அப்பா நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துடார்.. ஏதாவது புது விதமான நோய் அப்படித்தான் அம்மா சொல்லுவாங்க..பத்து வயசு வரைக்கும் அவர் காட்டிய பாசத்தை இன்னும் என்னால் மறக்கவே முடியலை சார்..


ஓர் வேளை எங்க அப்பா உயிரோட இருந்தா அவரும் உங்களை மாதிரி இருந்திருப்பார்..


என்னப்பா சொல்லுறே.. ஆமாம் சார் அவர் கூட சட்டம் படிச்சு லாயர் வேலை பார்த்தார்... நீதிபதி தேர்வு கூட எழுதியதா அம்மா சொல்லுவாங்க...


பரீட்சை ரிசல்ட் அவர் பாஸீ என்றது, ஆனா நோய் அவரை பெயில் ஆக்கிடுச்சு...

உன்னோட பெயர் என்னப்பா... எங்க ஊர் சாமி பேரூ சங்கர்..


என்னோட பெயர் தெரியுமா.. உதட்டை பிதுங்கினான்.. 


இசக்கிவேலு...


அவரின் கைகளை பற்றி உணர்ச்சி வசப்பட்டான்... அவருக்கும் ஏதோவொரு உணர்வு தாக்கியது 


எனக்கு எல்லாமே எங்க அப்பாதான் ஆனா சின்னவயசுலையே அவர் இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டேன்... லைசன்ஸ் எடுத்து காட்டினான்.


அதில் சங்கர் இசக்கிவேலு  என எழுதி இருந்தது..


சார் எங்க அப்பா பெயர் அது ஆனால் பலர் அதை ஜாதின்னனு நினைச்சிடுவாங்க.. மத்தபடி நான் யார் வம்புக்கும் போகவே மாட்டேன்..வாங்கின கடனை முழுசா கட்டணும் தங்கச்சி அம்மாவை நல்லா ழார்த்துகிடணும் இதைவிட பெரிய ஆசை எனக்கு எதுவும் கிடையாது சார்..


புரியது நீயும் எனக்கு ஓர் மகன் மாதிரி தான்.


தம்பி உனக்கு கார் நல்லா ஓட்ட தெரியுமா.. 


அவனின் போன் ஓலித்தது டேய் சங்கரூ ஏன்டா இன்னும் ஸ்டாண்டுக்கு வரலை.. உனக்கு ஏதும் உடம்புக்கு மறுமுனையில் பேசியதும் அவனின் அன்பு நண்பன் பேராட்சி... உன்னை தேடி விஜய் வந்திருக்கான்...நீ எப்போ வருவே 


.

.இல்ல அண்ணே.. நேத்து ஆட்டோவில் வந்த ஆளுங்க ஓர் தங்க சங்கிலியை விட்டு விட்டு போயிட்டாங்க அதை கொடுக்கிறதுக்காக வந்தேன்..


சரி சரி அப்போ நீ அதை முடிச்சுட்டு வா 

. இவன் உனக்காக காத்திருப்பானாம்.


அருகில் இருந்த விஜய் சொன்னது போனில் கேட்டது பிரெண்ட்ஸுக்காக காத்திருந்தா தப்பில்லை

.பொறுமையா வரச்சொல்லுங்க..



சரி சார் நான் கிளம்புறேன் என்ற போது ஓர் நிமிஷம் தம்பி எனக்கு ரிடையர் ஆயிட்டேன் ஆனாலும் எப்போதாவது வெளியே போகும் போது வண்டி ஓட்ட ஆள்தேவைபடும்.. நான் கூப்பிட்டா நீ என்னோட கார் ஓட்டுறதுக்கு ஆக்டிங் டிரைவர் வேலைக்கு வருவீயா..நாலு நாள் முன்னாடியே தகவல் சொல்லிடுவேன் நீ ஓண்ணும் கவலைபடாதே ..


என்ன வண்டி சார்...வா நானே காட்டுறேன்..கார்ஷெட்டில் போய் பார்த்தவனுக்கு மகிழ்ச்சியா இருந்தது..


தான் பல நாட்களாக ஓட்ட ஆசைப்பட்ட அதிவிலையுர்ந்த Fortuner... 



தூரத்தில் பாடல் எங்கோ ஒலித்தது இருவரின் காதுகளிலும் கேட்டது..


சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை உடையுடுத்தி சிவகங்கை குளத்தருகே சீர் துர்க்கை சிரித்திருப்பாள்.


அனைவரையும் காக்கும் விஷ்ணு துர்க்கை சுவர் ஓரத்தில் மல்லிகை மலர் மாலையில் சிரித்தபடி ..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...