பெண் விடுதலை பற்றி மேடையில் பேச காசு வாங்கி விட்டு..நல்ல ஹோட்டலில் சாப்பாடு சொல்லுங்க.போகும் போது ஸ்வீட் இரண்டு கிலோ வாங்கி கொடுங்கள் என்றே முடிந்தவரை வசூல் செய்தவன்.. மேடையில் சொன்னான் பெண்களை ஆண்கள் வீட்டில் அடிமையா நடத்தும் நிலை மாற வேண்டும்.. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது இதை கேட்டவள்.வீட்டில் வந்து அனைவரிடமும் கோபத்தை காட்டுகிறாள்.."நீங்க எல்லோரும் பெண்களை அடிமையாக நடத்துறீங்க"..என்றே எதுவுமே புரியாமல் கத்துகிறாள்..
எப்படி புரியவைப்பது..கஷ்டபட்டு வேலைக்கு போய் வயதான அம்மா அப்பா மனைவி குழந்தைகள் சொந்தகாரர் இவங்களை பற்றி அவனுக்கு என்ன தெரியும்.
பெண் விடுதலை பெண் விடுதலை என்ற பேசினா காசு தருவாங்க என்பதற்காக அவன் பேசுறான்..அவனை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கும் அந்த இயக்கம்.
அந்த இயக்கத்தின் வரவு செலவு கணக்குகளை வருமான வரித்துறை ஆய்வு செய்தால் நாட்டு மக்களுக்கு அவர்கள் செய்திருக்கும் போலி ஊழல் தெரியவரும்..
கற்று எழுத்தறிவித்தாலும் பெண் புத்தி பின் புத்தி தான் என்ற ஔவையாரின் வரிகளை நினைத்து பார்க்கிறேன்... மேடையில் பெண் விடுதலை பேசும் அவனின் மனைவியும் மகளும் சமையலறையில் அடிமையாக வாழ்கின்றனர்... ஆனால் தன்னை முற்போக்கு வாதியாக காட்டிக் கொண்டு நன்றாகவே கல்லா கட்டுகிறான்...
பெண்ணை தனது வீட்டில் மகாராணியாகவே நடத்தும் அப்பா கணவன் மகன்.. இவர்களை விட காசு வாங்கி விட்டு மேடையில் பெண் விடுதலை பேசுபவன் எந்தவிதத்திலும் உயர்ந்தவனில்லை... இங்கே பெண்கள் யாரும் அடிமையாக இல்லை.ஆண்கள் தான் பெண்களின் அடிமையாக கணவன் மகன் என்ற பெயரில் வாழ்கின்றனர்..
இனியோர் விதி செய்வோம்... பெண் விடுதலை என்ற யாராவது பேசினால் தைரியமாக சொல்லுங்கள்... எங்களின் அப்பனும் கணவனும் மகன் உண்மையானவர். என்றே காசு வாங்கி பேசும் மனிதரை புறந்தள்ளுங்கள்
#பெண் விடுதலை #சதந்திரம்
No comments:
Post a Comment