பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஓவ்வொரு மனிதரும் மிகவும் பயபக்தியுடன் இறைவனை காண செல்கின்றனர்.
அப்படி செல்லும் இந்து மக்களில் பலரும் சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் அதில் பிரச்சினை இல்லை.
ஆனால் அசைவம் சாப்பிடும் மக்கள் கூட திருப்பதி ஏழுமலையானை வணங்க செல்கிறோம் அதனால் மாமிசம் மற்றும் அதன் தொடர்ச்சியான உணவுகளை உண்ண கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் சைவ உணவுகளை உண்டு நேர்த்தியான விரதமிருந்து செல்வது இந்து மத நம்பிக்கை.
இங்கே இந்து மத உணர்வுகளை மட்டும் கேள்வி கேட்டு விமர்சனம் செய்து விட்டு,பிற மதங்களை பற்றிய கேள்விகள் வரும் போது அமைதியாகும் சில அதிபுத்திசாலிகள் இருக்கின்றனர்.
கடவுளே இல்லை என்பவர்களுக்கு கடவுளை பற்றிய விமர்சனமும் கோவில் சார்ந்த விஷயங்களில் கருத்து சொல்வதும் ஏன் என்று தான் எங்களுக்கு புரியவில்லை.
சமூகநீதியை மேடைக்கு மேடை பேசும் நீங்கள் உங்களின் தலைவர் பதவியை சமூக நீதி அடிப்படையில் கொடுங்கள் என்று நாங்களும் சொல்கிறோம்..
ஏன் அதற்கு மட்டும் உங்களால் பதில் சொல்ல இயலவில்லை.
இத்தனை ஆண்டுகளாக கட்சி தலைவராக இருந்து வீட்டீர்கள்... அந்த பதவியை, கட்சியில் புதிதாக நேற்று வந்து சேர்ந்த இன்னொருவருக்கு கொடுத்தால் தான் என்ன
உதாரணமாக உங்களுக்கு ஓர் குறிப்பிட்ட விஷயத்தை பிடிக்காது என்றால் அதை விட்டு தள்ளி நில்லுங்கள் அதுவே சிறந்தது.
அதைவிடுத்து எங்களின் இந்து மத கோவிலில் நடக்கும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே.
ஓர் வேளை நீங்கள் கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டு இந்து மத கடவுளை கேலியும் நய்யாண்டியும் செய்து விட்டு இது ஜனநாயக நாடு யாரும் யாரை விமர்சனம் செய்யலாம் என்று சொன்னால் அதையும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்..
அதே போல் நாங்களும் ஜனநாயக ரீதியில் பேசலாம் எழுதலாம் அல்லவா.. அதையே இப்போது செய்கிறோம்.
கட்சி தலைவர் பதவி என்பது உங்கள் கட்சி இருப்பவருக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம். நேற்றைய தினம் உங்களின் கட்சியில் உறுப்பினர் அட்டை வாங்கியவரை தலைவராக அமர வையுங்கள். ஆறு மாதங்களுக்கு ஓர் முறை புதிதாக சேரும் ஆயிரம் உறுப்பினர்களின் பெயர்களை துண்டு சீட்டில் எழுதிப்போட்டு அதில் யாரின் பெயர் வருகிறதோ அவரை தலைவராக நியமனம் செய்யுங்கள்.
இது ஜனநாயக நாடு யாரும் தனது தனிப்பட்ட கருத்துகளை சொல்வதற்கு உரிமை உள்ளது என்று மேடையில் முழங்கியது நீங்கள் தானே..
ஓர் வேளை இது தவறு என்று எண்ணினால் இன்னொரு விஷயத்தை செய்து தலைவரை உருவாக்குங்கள்
குறைந்த பட்சம் மேடையில் நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையில் அதற்கு நேர் எதிராக முதல் வரிசையில் இருக்கும் எல்லா நபர்களின் பெயரையும் துண்டு சீட்டில் எழுதி..குடவோலை முறையில் தலைவரை தேர்வு செய்யுங்கள்..
இத்தனை நாள் கடவுளை மறுத்து தலைவர் பதவியில் இருந்த நீங்கள் உங்களின் நண்பருக்கே அந்த பதவியை விட்டு கொடுத்தால் என்ன குறைந்தா போவீர்கள்.
நீங்கள் எல்லாம் சமத்துவம் சமூக நீதி என்று மேடையில் மட்டும் தான் பேச முடியும்.. ஆனால் அந்த தேசிய கட்சியில் நேற்று வரை யார் என்றே வெளியுலகிற்கு தெரியாதவர்களை கூட கட்சியின் அதிகார மையத்திற்கு வர முடிகிறது.
ஏனெனில் அவர்கள் நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கொள்கை நம்புகின்றனர்.. ஆனால் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நீங்களோ முதல்வர் நாற்காலியில் அமர நினைத்தே அரசியல் பேசுகின்றனர்..
முதல்வர் பதவியில் அமர்ந்தால் மட்டும் தான் மக்களுக்கு நல்லது செய்வேன் என்று பேசியவர் கூட இன்றைய முதல்வருக்கு பக்கத்தில் அமர வைத்து அவர் வாயால் புகழ வைக்கிறது விதி..
ஆம் நாங்கள் விதி கர்மா மறுபிறவி என்பதையும் இந்துமதம் சொல்லும் எல்லா கதைகளையும் நம்பும் சாதாரண இந்துக்கள் தான்.
நம்பிக்கை என்பதை முழுமையாக நம்புவது அதை எங்களுக்கு எங்களின் புராணங்கள் சரியாகவே சொல்லி இருக்கிறது.
அரசர்களும், அரசும் நிச்சயமாக மாறும், அவ்வளவு ஏன், ஒரு காலத்தில்அமைச்சர்களாக இருந்து பதவியை இழந்த பிறகு. கட்சித் தொண்டர்கள் கூட அவரை மதிக்க மாட்டார்கள். அமைச்சர்கள் கூட தங்கள் தலைவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்துதலைவராக மாறியது வரலாறு. இது உலகெங்கிலும் உள்ள பல கட்சிகளின் வரலாறு. ஆனால் சாதாரண மக்களுக்கு வீழ்ந்த தலைவர்களைப் பற்றியஅனுதாபம் இருக்கும். மக்கள் ஆண்ட பலகட்சிகள் தங்கள் தலைவர்களின் தவறான முடிவுகளால், கட்சி கரையான் புற்று போல் கரைவதை காப்பாறற முடியாமல் கதறுவதை நாங்கள் சரித்திரமாக படித்து இருக்கிறோம்..பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.
அரசியல் நண்பர்களே உங்களுக்கு ஓன்றை அன்புடன் சொல்லிக் கொள்கிறேன்..உங்களுடன் இருப்பவர்களை எல்லாம் உங்களுக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பினால் அதை விட பெரிய அரசியல் பிழை எதுவுமில்லை.
எங்களின் இந்து மதம் சார்ந்த விஷயங்களில் கடவுளை நம்பாதவர்களும் முதல்வர் நாற்காலி கனவில் மிதக்கும் சில அரசியல்வாதிகளும் எங்களுக்கு அறிவரை சொல்ல வேண்டாம்.
ஓர் வேளை அப்படி
கருத்து சொன்னால் நாங்களும் பதிலுக்கு சொல்வோம் உங்களின் கட்சியில் நீங்கள்
மட்டும் தான் தலைவர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது சர்வாதிகாரம்.
கட்சி தலைவர் பதவியில்
ஓவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு நபர் அமர்ந்தால் நல்லது தானே.
அரசு அதிகாரத்தில் அமர
நினைத்து அரசியல் பேசும் நீங்கள். அரசு உத்தியோகத்தில் இருப்பது போல் ஆண்டுக்கு
ஓர் முறை சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யுங்கள்
இதுவே சமூக நீதி,
சமத்துவம்
கட்சி உறுப்பினராக
இருக்கும் அனைவருக்கும் தலைவர் பதவியில் அமரும் தகுதியும் திறமையும்
இருக்கிறது.
தேர்வு செய்யப்படும்
ஓருவர் ஓர் ஆண்டு மட்டுமே அந்த பதவியில் இருக்கலாம் அடுத்த ஆண்டு புதிதாக இன்னொரு
நபரை பதவியில் அமர வையுங்கள்.
அதை போலவே வரவு செலவு
கணக்குகளை பார்க்கும் கட்சி பொருளாளர் பதவி வகிப்பவரும் ஓவ்வொரு ஆண்டும் அந்த
பதவியை இன்னொரு புதிய நபருக்கு கொடுக்க வேண்டும் இதை செய்ய உங்களால் முடியுமா...
உங்களின் கட்சி பதவியில் உங்களின் தொண்டன் அமர்வதை கூட கற்பனை செய்ய இயலாத
நீங்கள்.. எங்களின் கடவுளையும் கடவுள் சார்ந்த விஷயத்தையும் விமர்சனம் செய்வது
சரியல்ல
அடிமட்ட தொண்டராக இருக்கும்
ஓருவரை உங்களின் கட்சி இயக்கதில் தலைவர் பதவியில் அமர செய்யுங்கள். ஓவ்வொரு
தொண்டனும் தலைவர் பதவியில் அமர கனவு காண்பதில் தவறு கிடையாதே
நீங்கள் திருப்பதி லட்டு பற்றிய எங்களின் இந்து மத நம்பிக்கை பற்றி பேசுவதாக இருந்தால் எங்களுக்கு ஆதரவாக பேசுங்கள் அல்லது அமைதியாக இருக்கவும் ஏன் என்றால் இது எங்களின் மத உணர்வு சார்ந்த விஷயம்.
அரசியலமைப்பு
சட்டத்தின்படி சட்ட மேதை அம்பேத்கர் எங்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை.
இறைவனையும் இந்திய
இறையாண்மையும் உளப்பூர்வமாக நம்பும் இந்தியர் நாங்கள்
ஜெய் ஹிந்த்
No comments:
Post a Comment