அண்ணே சாப்பிட்டு நாலு நாளாச்சு... நீங்க ஏதாவது கொடுத்தா நல்லா இருக்கும்...
உங்க தங்கச்சி மாதிரி நினைச்சு ஓர் வேளை சாப்பாட்டுக்கு என்று ஓருத்தி சிக்னலில் கைக்குழந்தையுடன் கண்ணீர் விடும் போது ஏனோ ஜாதிஎன்ற பெயரில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சண்டை இழுத்து விடும் சில சுயநல அரசியல்வாதிகளின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது... அந்த பெண் சார்ந்த ஜாதியோ அல்லது மேடையில் வீர முழக்கம் செய்து விட்டு தனது மகனுக்கும் மகளுக்கும் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைக்க பிரயத்தனபட்டு..எந்த அரசு பதவியிலும் இல்லாமலே.. அந்த கட்சியின் பல கோடி ரூபாய் சொத்துக்களை தனது உடனிருப்பவருக்கே தெரியாமல் களிபரம் செய்து தனது சொந்த மகனுக்கு சொத்துகளை மகன் பெயரில் பட்டாபிஷேகம் செய்து வைத்த, அந்த சமூகநீதி மனிதர்..
தெருமுனை கூட்டத்தில் பேசினார்... தசரதன் தனது மகன் ராமனுக்கு தானே பட்டாபிஷேகம் செய்து வைத்தார்..
ஊரில் எங்கோ வாழும் ஓர் சிறந்தவரை தேர்ந்தெடுத்து அவரை மன்னராக அமர வைத்தால என்ன குறைந்தா போய்விடுவார்..
சுற்றி இருப்பவர்களோ கைதட்டி ஆரவாரம் செய்து போகின்றனர்.
மேடையை விட்டு இறங்கி வந்தவரிடம் கேட்டார். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் எந்த கட்சியிலும் இணைந்து விடாமல்..தனது விவசாய வேலைகளை நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி வேலை பார்த்து விட்டு வரும் போது,
ஆற்றில் இறங்கி குளித்து விட்டு கூரை கூட இல்லாமலே கரையில் இருந்து வந்து போகும் அனைவருக்கும் அருள் செய்யும் அந்த விநாயகர்.
இதை தவிர அவர் யாரிடமும் கடவுளை பற்றி பேசியதே இல்லை.ஏனென்றால் கடவுளை அறியவோ அறிய முற்படவோ இஷ்டமில்லாத ஓர் மனிதர் அவர்.
அவர் யதார்த்தமாக ஊரில் கேட்டும் கேள்விகளை சமாளிக்க முடியாமல், அவரை கண்டு விலகிப் போகும் பலர்.
டேய் அவர் தான்டா நம்ம இயக்கத்துக்கு சரியான ஆளூ அவரை மட்டும் பிடிச்சு போட்டா இந்த ஊரில் நம்மை ஓர் பயலும் எதிர்த்து பேசாத மாதிரி பண்ணிடலாம்
No comments:
Post a Comment